இரு நொடிகளில் எத்தனை எண்ணங்கள்...
அவனை கண்டவுடன்...!
வாய் திறக்க முடியவில்லை ...,
வாய்ப்பு கிடைத்ததும் விலகவில்லை ...,
வார்த்தைகளும் போதவில்லை...!
செவி 👂 மட்டும் சாய்கிறது...!
அவன் குரல் பதிவில் என் பெயரை..,
ஒரு முறையாவது பதிவிடுவான என...!
கண்களும் 👁️👁️ கனவுகளில் துடிக்கிறது..!
கற்பனையில் நான் கண்ட நிழல்...,
நிஜமாவது எப்போது என....!
உதடுகளும் 👄 உன்னோடு உளருகிறது...!
உன்னை நீங்கி செல்ல மனமில்லாமல்..!
முகம் தெரியாத வலைத்தளத்தில்
என் முகத்திற்கும் ...
புதிய முகபாவனைகளை
_ கற்றுத் தருகிறது.. உன் வருகை
அவ்வப்பொழுது ...
இப்படிக்கு.. அன்பு சிநேகிதி
சகி தயாநீ.