ஒரு கதை சொல் என்றாய்
"அம்மா" என்றேன்
ஒரு கவிதை சொல் என்றாய்
"அம்மா" என்றேன்
ஏதாவது சொல் என்றாய்
"அம்மா" என்றேன்
ஈர மணலில் எழுதச்சொன்னாய்
அம்மா என்றே எழுதினேன்
ஆர்ப்பரிக்கும் அலை கண்டு பயந்து
அம்மா அம்மா என்றேயழுதேன் - பயமல்ல
அழகு என்றாய்....
யாருமற்ற கடற்கரை வெளியில்
ஏதோ திசை நோக்கி கை நீட்டி
அம்மா என்று அழத்தேன்- சிரித்துக்கொண்டாய்....
என்ன வேண்டும் என்றாய்
அம்மாவென்று சப்தமிட்டேன்....
யாரை பிடிக்குமென்றாய்
நீ அம்மாதான் என்று
அழுத்திச்சொன்னேன்...
எனக்காய் தெரியாத கதை சொல்வாள் நான் ரசித்தேன் அம்மாவை....
எனக்காய் தலை விரி கோலமானாய் - நான் சிரித்துக்கொண்டேயிருந்தேன்...
"அம்மா" எங்கே என்பேன்
எங்கிருந்து கேட்டபோதும்
ஓடி வந்து எனை கட்டியணைப்பாய்....
இன்னும்
யோசித்துப்பாற்கிறேன்...
இதோ நீ இல்லாத இல்லத்தில்
எனது படுக்கையின் அருகில்
உன் கேள்விகள் இல்லாமலே
பதிலாய் "அம்மா" என்று ஒயாமல்
சொல்லிக்கொண்டே - கண்களை
மூடிக்கொள்கிறேன்............