Author Topic: இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..!  (Read 910 times)

Offline சாக்ரடீஸ்


பெண்ணே
நீ மலராகவும் மலர்வாய்
நீ தென்றலாகவும் வருடுவாய்
நீ புயலாகவும்  வீசுவாய்
உன்னில் தாய்மை உண்டு
அதில் மென்மையும் உண்டு
புரிந்தவர்களுக்கு
நீ ஒரு அழகான காவியம்
புரியாதவர்களுக்கு
நீ ஒரு விடை தெரிய புதிர்
உன் மௌனம்
சிலருக்கு வரம்
பலருக்கு சாபம்
பெண்ணே
உன் மனம் முழுமையாக
படித்திட இவ்வுலகில்
யாரும் பிறந்திடவில்லை ..
எனவே
பெண்ணே
உன்னக்கு நிகர் நீ மட்டுமே ..

சமூகமே
பெண்ணை
பூ என்று சொல்லாதே
அது காலையில் மலர்ந்து
மாலையில் இறந்து விடும்
பெண்ணை
புள்ளி மான் என்று சொல்லாதே
அது வேட்டைக்காரனிடம்
 சிக்கி இறந்து விடும்
பெண்ணை
மீன் என்று சொல்லாதே
அது மீன் வலையில்
மாட்டி இறந்து விடும்

பெண்ணை
ரத்தம் ,சதை
உயிர் ,உணர்வு
உள்ள ஒரு   ஜீவனாய்
சக  மனுஷியாய்
நினைத்தால் மட்டும்  போதும் ...

தாய்மை ஒன்றையே
போதும்
பெண்ணின் பெருமை சொல்ல
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

Offline யாழிசை

சோக்கி..பெண்ணின் பெருமையை இவ்வாறெல்லாம் சொல்லி புல்லரிக்க வைச்சிட்டீங்க ....

அருமையான படைப்பு நண்பா ......

வாழ்த்துக்கள் ......

Offline சாக்ரடீஸ்

நன்றி இசையா :)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
அழகான வரிகள்

பெண்ணை
ரத்தம் ,சதை
உயிர் ,உணர்வு
உள்ள ஒரு   ஜீவனாய்
சக  மனுஷியாய்
நினைத்தால் மட்டும்  போதும்""

அநேக பெண்கள் ஏங்குவது இதற்காக தான்
பல ஆண்கள் இதை புரிவது இல்லை
புரிந்தால் போதும்
கவி அருமை