Author Topic: ஜெகாவின் "சிந்தித்து செயலாற்றுங்கள்" கவிதையின் மறுபரிமாணம்  (Read 725 times)

Offline thamilan

நீலக் கடலில்
துயில் எழுந்த கதிரவனைப் பார்த்து
பனித் துளியில் குளித்த புல்லினம்
முகம் துடைத்துக் கொண்டது

இரவெல்லாம் காத்திருந்து
இளங்காலை வேளையில்
இரைதேடித் சென்றன
பறவை கூட்டங்கள்

விடிகாலைப் பொழுதில்
விடியலுக்கு காத்திருந்து
தூங்கும் மனிதனை
துயில் எழுப்பியது சேவல்

எழுந்த மனிதன்
விழுந்து கிடக்கிறான்
மீண்டும் படுக்கையில்

அஃறிணை  உயிர்கள் கூட
அதன் கடமையை செய்கிறது
உயர்திணை மனிதன் மட்டும்
உறங்கி கிடக்கிறான்

நிஜத்தை தொலைத்து விட்டு
கனவுக்குள் கரைந்து  போனவனுக்கு
இரவென்ன பகலென்ன
இரண்டும் ஒன்று தான்

விழித்தெழாதவனுக்கு
விடியலில்லை


Offline JeGaTisH

வார்த்தை இன்றி மீண்டும் மீண்டும் படிக்கிறேன்

அருமை அருமை Tamilan அண்ணா


niru na ... chat la thane irupeenga ...varen
 
« Last Edit: November 26, 2017, 02:03:16 AM by JeGaTisH »