தோழியுடன் தொலைபேசியில்
நிதிலன் : செவ்வந்தியின் தொலைபேசி அழைக்கிறது
வணக்கம் எப்பிடி இருகிறாய்
செவ்வந்தி : ம்ம்ம் வணக்கம் நல்லா இருக்கிறன் நீங்க....
நிதிலன் : ம்ம்ம் எனக்கென்ன இருகிறன் சொல்லு
செவ்வந்தி : எங்க வீட்டில இருந்து தொலைபேசி
நிதிலன் : எப்பிடி இருக்கிறாங்களாம்
செவ்வந்தி : அவங்க நல்லாதான் இருகிறாங்க எனக்குதான்
கல்லுபோடுறாங்க
நிதிலன் : ஏன் என்னாச்சு என்ன சொல்றங்க வீட்டில
செவ்வந்தி : வேறென்ன கல்யாண பேச்சுதான்
ஆனால் இந்தமுறை வழக்கம்போல இல்லை
கண்டிப்போடு அழுத்தம் திருத்தமா இருக்கு.....
மனசு அமைதியா இல்லை.....
நிதிலன் : வாழ்க்கைய வாழ்ந்துதானே ஆகணும் வீட்டுல
சொல்றபடி கட்டிக்கோ.....
செவ்வந்தி : தாங்களும் வாழ்க்கைய வாழ்ந்துதானே ஆகணும்
எப்போ உங்க கல்யாணம் ம்ம்ம்
நிதிலன் : எனக்கும் அதுக்கும் தொலைதூரம்
செவ்வந்தி : எப்போது கேட்டாலும் திருமண உறவை தள்ளிக்
கொள்கிறாய் வாழ்வில் ஏன் இத்தனை வெறுப்பு ?
நிதிலன் : என்மீதே எனக்கு பிடிப்பில்லை
வரப்போகும் என்னொருத்தி மேல் பிடிப்புண்டாகுமோ...
பொய்களை வாழ்வென்பதில் அர்த்தமில்லை
எனக்கு அனைத்தும் வெறுத்து போனது
எதன்மீதும் பிடிப்பில்லை
என்னையே வெறுத்து காலங்கள் கடந்தோடின
மீதமுள்ள வாழ்வில் தேவைகள் எதிர்பார்ப்புகள்
ஏதுமில்லை உள்ளமதில்...
செவ்வந்தி : எப்போது உன்னிடம் மாறுதல்வரும்?
இதையே பேசும் உன் மனம் என் வெறுப்புக்கானது.
நீ மாறவேண்டும் மரணம்வரை இது சாத்தியமில்லை...
நிதிலன் : உண்மைதான் அப்படியானால்
மரணம் விரைவாய் வர வேண்டிக்கொள்.
வலித்த இதயமும் கலங்கிய கண்களும்
அவள் குரலில் தெரிகிறது
மௌனம் மயான அமைதி தொலைபேசி
கணங்கள் நிமிடம் மணியென கடந்தும்
ஒலியெழவில்லை.....
குறுந்தகவல் ஒன்று....
செவ்வந்தி : தொலைபேசியை துண்டியுங்கள்
சற்று தாமதமாக பேசுகின்றேன்.
நிதிலன் : மூன்று மணிப் பொழுதுகள் கடந்து
மீண்டும் தொலைபேசி சிணுங்குகிறது.....
என்னாச்சு உனக்கு ஏன் நீண்ட மௌனம் ?
வேதனை படுத்திற்ரனா?
பேசு.....
அழுதியா பைத்தியம்.....
செவ்வந்தி : நான்யாரு எனக்கேன் ங்க வலிக்குது,
எனக்கு வலிக்கும் என்று தெரிந்தா பேசி இருப்பீங்காளா
பரவாயில்லை.....
சொல்லுங்க.....
நிதிலன் : பேச்சை பேச்சோட போகட்டும் என்று விட்டிடு
இதுக்கெல்லாமா அழுதிட்டு இருப்பே மடைச்சி.....
யோசனையில யோசிக்காமல்.....
ஏதோ வாயில வந்திட்டு சொல்லிரன்
போகட்டும் விட்டிடு......
செவ்வந்தி : விடமுடியாதபடி நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன்
எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியல ஆனாலும் எனக்கு தயக்கம்
இல்லை உன்னிடம்.....
தெளிவாக நீண்ட கால யோசனைகளுக்கு பின்னர் தீர்மானித்தேன்
நிதிலன் : அப்படி என்ன தீர்மானமும் தீர்க்கமான முடிவும்?
என்னுடன் பேசுவது இல்லையென்றா ?
செவ்வந்தி : என்னுடைய மரணம் வேண்டுமானால் உங்களுடன்
பேசாமல் தடைபோடலாம்.....
நிதிலன் : பதிலுக்கு பழிவாங்கலா இப்படி எல்லாம் பேசுகிறாய்
செவ்வந்தி : உங்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பினேன் பாருங்க
பார்த்துவிட்டு கூப்பிடுங்க
நிதிலன் : பாக்கிறன் இரு................
செவ்வந்தி : வேண்டாமே...ங்க... இப்போ வையுங்க பாத்திட்டு கூப்பிடுங்களன்
நிதிலன் : என்ன புதுசா இருக்கு நீ செய்றது ம்ம்ம், மாப்பிள்ளையோட
படம் அனுப்பி இருக்கிறாயோ?
செவ்வந்தி : மிக்க நன்றி நல்ல ஆலோசனை மறந்துவிட்டேன்
கணவரது படமதை இணைக்க
இப்போ வையுங்களன் நான் அவரோட படத்தையும் அனுப்புகின்றேன்
கடிதம் காணும் கணத்தில் வந்துவிடும்
நிதிலன் : கல்யாணம் என்றபோவே கூதூகலமாகிற்ரே வாழ்த்துக்கள் முதல்ல
செவ்வந்தி : சொன்னதை செய்யுங்களேன்..... ங்க பாத்திட்டு கூபிடுங்களேன்
நிதிலன் : ம்ம்ம்... சரி கூப்பிடுறன்... பாத்திட்டு.....
எதுக்கு புரியலையே... ?