Author Topic: இனியொரு விதி செய்வோம்  (Read 683 times)

Offline thamilan

இனியொரு விதி செய்வோம்
« on: November 22, 2016, 09:33:05 PM »
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை

முடிந்தால் வாழவைத்து வாழுங்கள்
இல்லையென்றால்
வாழ விட்டு வாழுங்கள்
அது போதும்


உள்ளே உள்ளது தான்
உலகம் - அதை
உணர்ந்துகொண்டால் கோடி இன்பம்
பிறப்புக்கு ஒரு வழி
இறப்புக்கு பல வழி
இடைப்பட்ட வாழ்வில்
பிழைப்புக்கு...? 

அது நேர்வழி என்று
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்நாளும் காப்போம்
« Last Edit: November 22, 2016, 09:35:58 PM by thamilan »

Offline AnoTH

Re: இனியொரு விதி செய்வோம்
« Reply #1 on: November 23, 2016, 02:00:35 PM »
இனிய சகோதரன் தமிழன்,

தங்களுடைய கருத்துக்களும்
தங்களுடைய பார்வையும்
அதி சிறப்பு வாழ்த்துக்கள்


சகோ.

முடிந்தால் வாழவைத்து வாழுங்கள்
இல்லையென்றால்
வாழ விட்டு வாழுங்கள்
அது போதும்

அற்புதமான வரிகள்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: இனியொரு விதி செய்வோம்
« Reply #2 on: November 23, 2016, 02:57:28 PM »

வணக்கம் தோழர் தமிழன் .....
 
அழகான கவிதை ....
அருமையான வரிகள் ...
சிந்தனை சிறப்பு ....

மென்மேலும் தொடரட்டும் இக்கவிப்பயணம் ....

~ !! வாழ்த்துக்கள் !! ~


~ !! ரித்திகா !! ~