திருமணத்திற்கு பின் காதலித்தால் இப்படித்தான் இருக்கும்...
*காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பிஒரு காஃபி கொடுத்தால் போதும், இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.
* பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!
*பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாளென்றால், இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!
* சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன், ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?
* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,இதோ மின்னல் தென்படுகிறது,..அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!
* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றேன்,என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.
* சொல்வது பொய் எனத் தெரிந்தும் நிதானமாகக் கேட்பாள்,அவளை நேசிக்க வேறு காரணம் தேடுவது வீண் வேலை.!!