49. சில சோதனகைளும், மனவேதனைகளும்.
மக்கள் திலகம் அவர்களுக்கு 1955க்கு மேல் நல்ல நிலைக்கு வந்த பிறகு ஏற்பட்ட சில சோதனகைளும், மனவேதனைகளும்.
அதாவது 1957ல் மக்கள் திலகம் அவர்கள், சொந்தத்தில் தயாரித்த “நாடோ டிமன்னன்” படம் வெற்றிபெற்றால் மன்னன், இல்லையென்றால் நாடோ டி என்று உண்மையிலேயே பலரால் பேசப்பட்டது இருந்த சமயம், சிலர் மக்கள் திலகம் அவர்களிடம், நீங்கள் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வருகிறீர்கள். அதுவும் இது உங்களுடைய சொந்த படம் நிச்சயமாக நீங்கள் இதில் வெற்றி பெறுவீர்கள் என்றார்கள். படப்பிடிப்பு முடிந்து 1958ல் “நாடோ டி மன்னன்” மக்களை சந்திக்க வெளிவந்தார் வெற்றியும் கண்டார். அடுத்து இதே 1958ல் இவருடைய சொந்த நாடகத்தில் நடித்துக் கொண்டு இருக்கையில் கால் எலும்பு அடிபட்டு, பாதியிலேயே நாடகம் நிறுத்தப்பட்டது. பிறகு, நடக்க முடியாமல் மூன்று மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்தில், மக்கள் திலகம் அவர்கள் இனிமேல் படங்களில் நடிக்க முடியாது என்று பரவலாக பேசப்பட்டது. கால்முன்பு போல் நடக்கலாம் ஓடி ஆடி வேலை செய்கிற அளவிற்கு பழைய காலைப் போன்று இருந்தது. இதற்கு பிறகு, முன்பை விட அதிக படங்கள் ஒப்பந்தமானது.
அதற்கு பிறகு 1958ல் கடைசி மாதத்தில் தன்னுடைய தெய்வத்தாய், சத்தியத்தில் வாழ்ந்த தர்மத்தாய் சத்தியபாமா அவர்கள் இறந்து விட்டார்கள். இது அவருக்கு ஒரு பெரிய இழப்பு. இதற்கு பிறகு 1962ல் தன்னுடைய இரண்டாவது மனைவி சதானந்தவதி அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனார். இந்த நேரத்தில் மக்கள் திலகத்துடைய மனம் எப்படி இருந்து இருக்கும். 1962க்குப் பிறகு மூன்றாவது மனைவியான ஜானகி அம்மாளுடன் எந்தக்குறைவும் இன்றி, ராமாபுரம் தோட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அதாவது சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் நல்ல அம்சம் நிறைந்த காலம் அது. அப்படிப்பட்ட அந்த நல்வாழ்வில் 1967ல் ஒரு பெரிய சோதனை ஏற்படுகிறது. அதுதான் எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டது. இந்த கொடூரமான சம்பவத்தை நினைத்து ஊரும், உலகமும் அனுதாபப்பட்டது. இரண்டே மாதத்தில் குணமடைந்து விட்டார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் என்று பேசியவர்கள் எல்லாம் ஆச்சரியப்படுகிற மாதிரி, மக்கள் திலகம் அவர்கள் நான் செத்துப் பிழைத்தவண்டா எமனைப் பார்த்து சிரித்தவண்டா என்பதனை போல் மீண்டும் அதிகமான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்