Author Topic: ~ அரிசி உப்புமா ~  (Read 338 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226284
  • Total likes: 28769
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ அரிசி உப்புமா ~
« on: May 14, 2016, 10:30:23 PM »
அரிசி உப்புமா



தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு –  1/4 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 3 கப்
எண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணை –  1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது.
தாளிக்க – எண்ணை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:

அரிசி, பருப்பைக் கழுவி, நீரை வடித்து, மிக்ஸியில் ஓரிரண்டு நிமிடம் ஓடவிட்டு, ரவை மாதிரி அரைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, உடைத்த ரவையைச் சேர்த்துக் கிளறவும்.
தண்ணீர் வற்றி, கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
இந்தக் கலவையை இட்லிதட்டில் கொழுக்கட்டைகளாகப் பிடித்து, குக்கரில் வெயிட் போடாமல் (இட்லி வேகவைப்பது மாதிரி) 10லிருந்து 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும். (உடனடியாகச் செய்ய நினைப்பவர்கள், கைபட முடியாமல் சூடாக இருந்தால் அப்படியே ஒரு கரண்டியால் எடுத்துவைத்து, இட்லிவடிவிலேயே கூட, தட்டி வேகவைக்கலாம்.)
வெந்த இட்லிகளை உதிர்த்து, தேங்காய் எண்ணை, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.