Author Topic: ~ சன்னா மசாலா ~  (Read 321 times)

Offline MysteRy

~ சன்னா மசாலா ~
« on: March 01, 2016, 10:21:49 PM »
சிக்கன் நெய்சோறு



கொண்டைக்கடலை – கால்கிலோ
வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
இஞ்சி விழுது – ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது – அரைதேக்கரண்டி
காய்ந்தமிளகாய் – இரண்டு
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – இரண்டு
ஏலக்காய் – இரண்டு
மிளகாய்த்தூள் – ஒன்றரை தேக்கரண்டி
தனியாத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சத்தூள் – அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு பிடி
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் – இரண்டு தேக்கரண்டி

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். காய்ந்தமிளகாய், சீரகத்தை ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.
கொண்டைக்கடலை ஊறவைத்த தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி ஊப்புத்தூளை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வேகவைத்த கடலையில் கால் கோப்பை தனியாக எடுத்து வைத்து கரண்டியின் உதவியால் நன்கு மசித்துக் வைக்கவும்.
பிறகு வாயகன்ற சட்டியில் வெண்ணெய், எண்ணெய்,இரண்டையும் கலந்து ஊற்றி காயவைக்கவும். பிறகு வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு எல்லாத்தூள்களையும், பொடித்த சீரகத் தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் நறுக்கினத் தக்காளியைக் கொட்டி, உப்பைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வெந்து, எல்லாம் ஒன்றாய் சேர்ந்து மசாலா பதத்திற்கு வரும் வரை வேகவிடவும்.
பிறகு வேகவைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து கொட்டி நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதித்து கெட்டியான பதம் வந்தவுடன் மசித்து வைத்துள்ள கடலையை போட்டு நன்கு கிளறி விடவும்.