1.மருத்துவத்துறை படிப்புகள் யாவும் முற்றிலும் திறமை & மதிப்பெண்கள் அடிப்படையிலே இலவசமாக தரப்பட வேண்டும். அப்படி இலவசமாக அரசாங்க கல்லூரிகளில் படித்த மருத்துவர்கள் மட்டுமே அரசாங்க வேலைகளில் அமர்த்த பட வேண்டும். இப்படி அரசாங்க கல்லூரிகளிலே திறமை மற்றும் மதிப்பெண் அடிப்படையிலே பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் சேவை நோக்கிலே மருத்துவ தொழிலை செய்வார்கள்.அவர்கள் தனியே மருத்துவமனை அமைப்பினும் கட்டணங்கள் குறைவாகவே வசூலிப்பார்கள்.ஏழைகளும் இந்த திறமை மிக்க மருத்துவர்களையே அணுகுவார்கள்.
ஒரு வருடம் கட்டாயமாக கிரமாபுரங்களில் சேவை செய்யவேண்டும் என்ற தற்போதைய மருதுவகலூரி விதிமுறைகளையும் முழுதளவில் விரும்பி ஏற்றுக்கொண்டு கிராமப்புறங்களில் மருத்துவம் செய்யும் பயிற்சியை பெறுவர்.
2.தங்களுடைய கௌரவத்துக்காக மருத்துவ படிப்பை விரும்பும் பணக்கார மாணவர்களுக்கு தனியே மிக குறைவான குறிப்பிட்ட அளவு இடங்கள் ஒதுக்கப்பட்டு தனியார் மருத்துவகல்லூரிகளிலே அவர்கள் விருப்பப்படி கட்டம் செலுத்தி கல்வி வழங்கப்பட வேண்டும்.
பணக்கார மாணவர்கள் பணம் கொடுத்து கல்வி பயின்றதால் பணகாரகளுக்கு மருத்துவம் செய்யும் ஆடம்பரம் மிக்க மருத்துவமனைகளை நிறுவி மருத்துவம் செய்ய ஏதுவாக அமையும்.
இது போன்று நடைமுறை வருமேயானால் மேலே யூசுப் அவர்கள் சுட்டிக்காட்டியதை போன்ற கொலைகாரர்களின் போராட்டம் வர வாய்ப்பே இல்லை . சமுதாய விழிபுணர்வுக்கு உகந்த செய்தியை தந்திருகிறீர்கள் யூசுப்.நன்றி.