Author Topic: ~ வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல் ~  (Read 428 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்



பயண காலங்களில் வெளியூர் செல்லும்போது கொண்டுசெல்வதற்கான துவையல் வகைகளில் ஒன்று தேங்காய்த் துவையல். தேங்காய்த் துவையல் சாதாரணமாக சீக்கிரம் கெட்டுவிடும். ஆகவே, ஒரு மூடித் தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். 10 மிளகாய் வத்தல்களை எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். உடைத்த, தோல் நீக்காத உளுத்தம்பருப்பை மூன்று மேசைக் கரண்டி அளவு வாணலியில் வறுத்து எடுக்க வேண்டும். உரித்த வெள்ளைப் பூண்டு நாலு பல், புளி அரை எலுமிச்சை அளவுக்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். துருவிய தேங்காயையும் லேசாக எண்னெய் விட்டுப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். மேற்சொன்ன எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால், துவையல் தயார். இதை மீண்டும் சற்று நேரம் வாணலியில் போட்டு நீர் வற்றச்செய்து கொள்ளலாம். தாக்குப்பிடிக்கும் துவையல் என்று இதைச் சொல்லலாம். மறுநாள் வரை கைபடாமல் எடுத்துச் சாப்பிடலாம்.