Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 140739 times)

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #525 on: March 27, 2025, 04:50:33 PM »
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை
அடுத்த குறள்
🪷  --------உள------இன்னாத --------
கனி------------ காய்--------    🪷


Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #526 on: March 27, 2025, 06:47:46 PM »
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே! 


அடுத்த குறள்:-
_____ பிறன்கேடு ____சூழின்
______ சூழ்ந்தவன் ______.

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #527 on: March 30, 2025, 12:48:03 PM »
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு

மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.


அடுத்த குறள்
🪷   கற்ற-------ஆய பய-------கொல் -------------
நற்-------- ------------ எனின் 🪷

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #528 on: March 30, 2025, 03:07:14 PM »
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை..


அடுத்த குறள்:-
_______ நீங்கிய ______ மறுமையும்
_______ இன்பம் ______.

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #529 on: March 31, 2025, 06:19:24 PM »
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம்

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .


அடுத்த குறள்
🪷 இன்---------- -------தின்றல் ----------  எவன்--------
----சொல் ------- வது.

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #530 on: April 10, 2025, 07:07:50 AM »
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது


இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?  (௯௰௯)
— மு. வரதராசன்



அடுத்து
அறத்தினூஉங்கு _______  ___________ அதனை
மறத்தலின் ________ கேடு

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #531 on: April 10, 2025, 01:32:29 PM »
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.


அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை, அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை...

அடுத்த குறள்:-
தன்நெஞ் ________ பொய்யற்க __________
________ தன்னைச் _______.

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #532 on: April 10, 2025, 02:28:57 PM »
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.   

ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்த பின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும்

..........ஆயினும் ......... மென்றோள்
அகறலின் ஆங்கொன் ...........

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #533 on: April 10, 2025, 04:23:51 PM »

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின்

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது


அடுத்த குறள்
🪷 இல்லை --------வர்க்கு -------------- ஊடுதல்
வல்-------- அவர்-------- மாறு.

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #534 on: April 11, 2025, 08:05:56 AM »
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.


அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும்

அடுத்த குறள்:-
__________பெல்லாம் ________ யாக்கை
_______ அன்பி ________

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #535 on: April 11, 2025, 03:38:28 PM »
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்.


அடுத்த குறள்
🪷பொறி--------ஐந்த--------- பொய்தீர் ----------
நெறி----------  --------வாழ் வார் 🪷

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #536 on: April 18, 2025, 01:23:35 PM »
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்

அடுத்த குறள்

தனக்குவமை ________ தாள்சேர்ந்தார்க் ________
மனக்கவலை _________. __________ .

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #537 on: April 19, 2025, 03:07:29 PM »
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்


அடுத்த குறள்
🪷 ஆற்றின் ---------- வருத்தம் -------------
போற்றி--------- ---------------- படும்.

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #538 on: April 21, 2025, 06:38:15 AM »
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்


தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்


அடுத்த குறள்

ஒல்லும் _________  ________ ஓவாதே
செல்லும்வாய் _______ செயல்

Offline Thooriga

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #539 on: April 21, 2025, 02:53:12 PM »
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்


செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.


வேண்டுதல்   ------------ ---------------- சேர்ந்தார்க்கு
------------ ------------ இல