Author Topic: ~ தலை முடி உதிராமல் நன்கு வளர உங்களுக்கு சில குறிப்புக்கள் ~  (Read 365 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227481
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தலை முடி உதிராமல் நன்கு வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்

தலை முடி உதிராமல் நன்கு வளர..!
தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை, படிகாரம்,நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.

செய்முறை:

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.