Author Topic: புகழ் ஒரு விதத்தில் லாகிரி வஸ்த்து  (Read 5612 times)

Offline Global Angel

புகழ் ஒரு விதத்தில் லாகிரி வஸ்த்து


எழுதுவதில் சுகம் உள்ளதா, படிப்பதில் சுகம் உள்ளதா, எழுதுவதில் இன்பம் இருந்தால் எழுதிக்கொண்டே இருக்க இயலுமா, பலவற்றை படித்து நாம் உள் வாங்கியவற்றை நமது பாணியில் எழுத்துக்களில் கொண்டு வருவதும் அதற்காக மட்டுமே படிக்க வேண்டுமா, அறிந்து கொள்ளும் ஆவல் இருக்க வேண்டும் அப்போதுதான் நம்மால் முழு கவனத்துடன் படிப்பதில் உள்ளவற்றை கிரகிக்க இயலும், ஆர்வம் என்பது படிப்பதற்கும் எழுதுவதற்கும் ஏன் ஏற்படுகிறது, அப்படி ஆர்வம் ஏற்படாதவர் எண்ணிக்கை அதிகம்.

எழுதுவதும் படிப்பதும் மனிதனின் இயல்பா, இல்லையே, நாம் பழகிக்கொள்ளும் பல பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று. சில பழக்க வழக்கங்கள் நமக்கு அவசியம் என்று நம்புவதால் அவற்றை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுகிறோம், இந்நிலையில் நம்மை ஈர்க்கும் பல அறிய கருத்துக்கள் நம்மை அவற்றின் பால் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் துண்டி அவற்றின் மூலம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் நம்மை துரிதபடுத்துகிறது.

நாம் படித்ததில் நம்மை பாதித்தவற்றை, தன்னால் ரசிக்க முடிந்த பலவற்றை பகிர்ந்து கொள்ளும் ஆவல் நமக்குள் தூண்டப்படுகிறது. இவற்றை சொற்களின் வடிவமாக்கி எழுதி அவற்றை மீட்டு எடுக்கிறோம், நாம் எழுதி முடித்த பின்னர் அதை படிக்கும் போது பல விடுபட்ட கருத்துகளை அதினூடே எழுதி நம் உள் உணர்வை திருப்தி படுத்துகிறோம், அதே திருப்த்தியை படிக்கும் மற்றவரும் அடைந்து விட்டால், அதை அவர் வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது இன்னும் அதிகமாக எழுத விழைகிறோம்.

எதன் ஆதாரத்தை வைத்து சொற்களை நாம் உருவாக்கினோமோ, அதற்க்கு நாம் பயன்படுத்திய முறை எதுவோ அதை மேலும் முனைந்து துரிதமாக செயல்படுத்த விழைகிறோம். இதில் எப்போது எவ்வாறு தடை ஏற்படுகிறது என்று யோசித்தால், பலருக்கும் படிக்கின்ற வாய்ப்புகள் குறைந்து வருதல், தாம் எழுதியவற்றை பிறர் பாராட்டாமல் விட்டுவிடும் போதுகூட இத்தகைய தடைகள் ஏற்படுகிறது.

ஆனால் ஒருவர் தான் எழுதிய அத்தனையும் மிக சிறப்பாகவே உள்ளது என்பதை மற்றவரது புகழை எதிர்பார்க்காமலேயே அறிந்து கொள்வதும் உண்டு. அப்படி அறிந்து கொண்டாலும் புகழ் என்பதற்கு அடிமையாகாத மனித மனம் கிடையவே கிடையாது. அப்படி அடிமைப்படுவதாலேயே அவரால் சிறந்த மிகச்சிறந்தவற்றை எழுதமுடிகிறது என்றும் கூட நம்பலாம்.

படிக்கும் வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ளும் போது எழுதும் வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ள இயலுகிறது, இதனூடே எழுத்துக்களைப்பற்றிய சிறந்த விமர்சனங்களை காணும்போது மிகச்சிறப்பாக எழுத்தும் ஆவலும் மேலும் தூண்டப்படுகிறது.