Author Topic: ~ காய்கறிகள் சில குறிப்புகள்! ~  (Read 437 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227447
  • Total likes: 29057
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
காய்கறிகள் சில குறிப்புகள்!




அரிசி மற்றும் தானிய உணவுக்கு இணையான அளவு காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். அதிலும், நாம் சேர்க்கும் காய்கறிகளில் மூன்றில் இரண்டு பங்கை வேகவைத்தும், ஒரு பங்கை பச்சையாகவும் பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது.

காய்கறிகள், ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதயநோய் ஆபத்தைக் குறைக்கின்றன. வயிறு மற்றும் குடல் சீரணப் பாதைகளை சீர்செய்து, மலச்சிக்கலை நீக்கும் அற்புதமான இயற்கை மருந்துதான் காய்கறிகள்.

எல்லாக் காய்களையுமே வேகவைத்துச் சாப்பிடலாம். வேகவைக்கும்போது சில நன்மைகளும் வேகவைக்காதபோது சில நன்மைகளும் உடலுக்குக் கிடைக்கின்றன.

பச்சையாகச் சாப்பிட்டால், கல் உப்பு, மிளகுத்தூள் அல்லது மோர் சேர்த்துச் சாப்பிடலாம்.

பச்சைக் காய்களான அவரை, முட்டைக்கோஸ், நூல்கோல், வெள்ளைப் பூசணி, வெண்டைக்காய், பீன்ஸ், கோவைக்காய் போன்ற காய்கறிகளைப் பச்சையாக, சாறு பிழிந்து அல்லது மோரில் போட்டுச் சாப்பிடலாம். இதனால் உடலில் நுண் ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படுவது இல்லை.

குறிப்பாக புற்றுநோய்க்கு பச்சைக் காய்கறிகளின் சாறு மிகவும் நல்லது. புற்று நோய் வளர்ச்சியைத் தடுப்பதோடு, அதற்கு எதிராகவும் செயல்படுகின்றன.

காய்கறிகளின் நுண் சத்துக்கள், மூளை ஆற்றலை மேம்படுத்தி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை சிறந்த எண்ண ஆற்றலுடன் கூடிய ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும்.