Author Topic: GOOD FRIDAY - EASTER  (Read 1380 times)

Offline Global Angel

GOOD FRIDAY - EASTER
« on: November 16, 2011, 05:30:55 PM »
GOOD FRIDAY - EASTER
                                                           
                                                           

நண்பர் ஒருவர் எனக்கு Happy Good Friday என்று வாழ்த்துக் கூறினார், அவர் ஒரு MBA பட்டதாரி. படித்ததினால் எல்லோருக்கும் எல்லாமே தெரிந்து விடுவதில்லை, பொது அறிவு என்பது உலக நடப்புக்களை அறிகின்ற அறிவு அவசியப்படுகிறது. நமது துறைக்கு அப்பாற்பட்ட செய்திகளையும் அறிந்திருப்பது என்பது எல்லோருக்கும் அவசியம் ஆனால் அவசியமில்லை என்கின்ற எண்ணம் தான் பரவலாக உள்ளது. அதைவிட இன்னும் பெரிய விஷயம் தான் சம்பந்தபட்டிருக்கும் துறையிலேயே அல்லது தான் வணங்கும் மதத்தைப்பற்றியும் தான் வாழ்ந்த வாழுகின்ற ஊரை, இடத்தினை பற்றியோ கூட அறிந்துகொள்வது அவசியம் அற்றதாக கருதும் பலரும் படித்த நபர்களில் அதிகம்.

இதற்க்கு காரணம் என்ன, பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் முக்கிய கருவியாக கல்வி இன்றைய சூழலில் மிக முக்கிய இடம் பெற்றிருப்பதே. பணம் வாழ்வின் மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுவதால் அதை அடையும் வழிகளைப்பற்றி அது நன்மையானதோ தீமையானதோ அதைப் பற்றிய உணர்வின்றி பணத்தை அடைகின்ற வழிகளை கண்டுபிடித்து பணம் சேமிக்கும் முறைகளில் வல்லவர்களாக வேண்டும் என்கின்ற உந்துதல் மட்டுமே இன்றைய காலத்தின் முக்கிய பணியாக கருதுகின்றனர்.

இயேசு கிறிஸ்த்து என்பவர் பிறக்கப்போவதையும் அவர் குறிப்பிட்ட காலத்திலே இறக்கப்போவதையும் தீர்க்கதரிசிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருந்தனர். அதன்படி இயேசு கிறிஸ்த்து பிறந்து முப்பதாண்டுகள் வாழ்ந்து சிலுவையில் கொல்லப்படுகின்றார், சிலுவை என்பது இயேசு கிறிஸ்த்து வாழ்ந்த காலத்தில் இருந்த மரண தண்டனை, திருடர்கள் மற்ற கொலை குற்றங்கள் செய்பவர்களுக்கு அக்காலத்தில் அங்கு இருந்த அதிகபட்ச தண்டனை, இயேசு கிறிஸ்துவின் மீது மத விரோதிகள் நடத்திய கொடுமையின் விளிம்பு இயேசுவை சிலுவையில் கொல்ல ஏற்பாடு ஆகியது, அவரை கொன்ற அந்த நாள் வெள்ளிக்கிழமை அந்நாளை பிற்காலத்தில் Good Friday என்று வழங்கினர். புனித வெள்ளி என்று தமிழிலில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இயேசுவை கொன்ற நாளை ஏன் Good என்று குறிப்பிட வேண்டும் என்பது பலரது கேள்வியாக இருக்கலாம்,

அவர் இறந்தது மனு குலத்தின் பாவங்களை அகற்ற, அது எப்படி அவர் இறப்பதால் மனுக் குலத்தின் பாவங்கள் அகலும் என்று இன்னுமொரு கேள்வி உருவாகும், ஆதி காலத்தில் விவிலியத்தில் [பைபிள்] உள்ளபடி ஆதாம் ஏவாள் என்பவர்களை ஆண்டவர் படைத்த பின்னர் அவர்களுக்கு கூறப்பட்ட கட்டளை குறிப்பிட்ட ஒரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது என்பது அப்படி அவர்கள் அதை உண்ணும் நாளில் பாவம் என்பதை அறிய நேரும் அப்போது அவர்கள் சாவார்கள் என்பது. சாத்தான் என்கின்ற பிசாசு நயவஞ்சகம் செய்து பூமியின் முதல் பெண் ஏவாளை தனது பேச்சால் நம்ப வைத்து அந்த பழத்தை உண்ணச் செய்தது, மீதியை பூமியின் முதல் ஆண் ஆதாமிற்கும் கொடுத்து உண்ணச் செய்தது. பாவம் என்பதை அறிந்த இருவரும் ஆண்டவரின் சாபத்திற்குள்ளாக நேர்ந்தது.

இந்த பாவம் தொடர்ந்தது, பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பூமியில் அதே பாவத்தை தொடர்ந்து செய்து பிள்ளைகளை பெற்று உலகம் முழுவதும் மனித இனம் பெருகியது. ஆதாம் ஏவாளுக்கு முதலில் பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகளின் மீதும் இந்த பாவம் தொடர்ந்தது, சாபத்தை சாத்தான் என்பவன் வேறு வகையில் பூமியின் மீது பெருகச் செய்கிறான், ஆதாமின் மகன் பூமியின் மண்ணை உழுது விதைத்து பின்னர் அறுவடை செய்த தானியங்களையும் காய் கனிகளையும் ஆண்டவனுக்கு படைக்க அவனை ஆண்டவர் ஆசீர்வதிப்பதை இன்னொரு மகன் கவனிக்கிறான், முதல் முதலாக இன்னொரு பாவம் அரங்கேற்றப்படுகிறது தன் சகோதரன் மீது பொறாமை கொண்டு அவனை அங்கேயே வெட்டி கொலை செய்கிறான். முதன் முதலில் மனிதனின் ரத்தம் பூமியின் மீது பாவ செய்கையினால் விழுகிறது இவ்வாறு பாவம் பூமியில் தழைக்கிறது பாவத்தை போக்கும் நிவாரணியாக விலங்குகள் பறவைகள் முதலியவற்றின் ரத்தம் பலியிட ஆண்டவர் கட்டளையிடுகிறார் பாவங்களுக்கேற்ப பலிகள் நிர்ணயிக்கப்படுகிறது. யூதர்கள் அவ்வாறே விலங்குகளையும் பறவைகளையும் மேடைகளை கட்டி அதன் மீது பலியிட்டு தங்களது பாவத்தை நிவிர்த்தி செய்கின்றனர். ஆனாலும் யூதர்களின் பாவம் குறைவதாக இல்லை ஏனெனில் அவர்கள் இன்னும் அதிகமான பாவங்களை செய்து ஆண்டவரை கோபப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

ஆண்டவர் யூதர்களின் பாவத்தை களைய பல தீர்க்கதரிசிகளை அவர்களிடையே எழுப்புகிறார் ஆனாலும் பாவம் பெருகிக்கொண்டே போனது, கடைசியாக நோவா என்கின்ற ஒருவரைத் தவிர பாவம் செய்யாதவன் மற்றும் ஆண்டவரின் கட்டளைகளுக்கு கீழ்படியாதவன் ஒருவனும் இல்லை என்கின்ற நிலைமை உருவாகிறது, அப்போது நோவாவிடம் ஆண்டவர் பூமியை அழிக்கப்போகின்ற விவரத்தை கூறி அதற்க்கு முன் ஜனங்களுக்கு அதைப்பற்றி எடுத்துச் சொல்ல சொல்லுகின்றார், நோவா என்பவர் மக்களிடம் பூமி அழிக்கப்பட போகிறது ஏனென்றால் பாவம் பெருகிவிட்டது என்கின்ற செய்தியை சொல்லுகிறான், அதை நம்புவதற்கு ஒருவரும் தயாராக இல்லை, நோவாவிடம் ஆண்டவர் ஒரு பெரிய மதகை உருவாக்கச்சொல்லுகிறார். அதன்படி ஒரு பெரிய மதகை நோவா உருவாக்குகின்றார். அதில் நோவாவின் மகன்கள் மருமகள்கள் என நோவாவின் குடும்பத்துடன் ஊர்வன பறப்பன காட்டு மற்றும் நாட்டு மிருகங்களில் ஜோடி ஜோடியாக அடைக்கப்பட்ட பின்னர் பகல் இரவு என்று 30 நாட்கள் ஓயாத மழை பெய்து பூமி அழிக்கப்படுகின்றது.

பின்னர் உண்டான ஜனமும் தொடர்ந்து பாவத்தில் மூழ்க ஆரம்பித்தது, ஆண்டவர் இம்முறை தனது சொந்த மகனை பூமியின் மீது மனிதனாக பிறக்கச் செய்து அவருடைய பாவமற்ற ரத்தம் பூமியின் மீது விழச் செய்து பூமியில் படிந்துள்ள பாவத்தை போக்க பாவ நிவாரண பலியாக செய்கிறார். இயேசு கிறிஸ்த்துவை சிலுவையில் பாவிகளுடன் பாவியாக கொல்லப்பட்டு பாவம் நிவிர்த்தி செய்யப்படுவதே Good Friday. மனிதர்களின் நலத்துக்காக ஆண்டவன் தனது மகனை பலியாக செய்வதை நினைவு கூறும் தினம், முன் குறித்தபடி மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்து உலகில் பரிசுத்த ஆவியானவராக தனது கடமைகளை செய்து வருகிறார். ஆதாமில் தோன்றிய மரணத்தை சிலுவையின் மீது ஜெயித்தார் என்பதை நினைவு கூறும் நாள் ஈஸ்ட்டர் சண்டே என உலக முழுதும் கொண்டாடப்படுகிறது.