எங்கள் தென்னை மரத்தில் கூடு கட்டி
விளையாடிய தூக்கனாங் குருவிகள் எங்கே
என் வீட்டு முற்றத்தில் கூடு கட்டி கொஞ்சி
விளையாடிய சிட்டுக் குருவிகளும் எங்கே
தென்னை மரத்தில் இருந்து செங்குத்தாய்
கீழே குதித்து நீந்தி விளையாடிய கிணறுகளும் எங்கே
நாங்கள் சந்தோசத்தில் ஆக்கி தின்ற கூட்டஞ்சோறும்
கில்லி,நொண்டி,கபடி,கண்ணாமூச்சி,கிச்சு கிச்சு தம்பளம்
என்று விளையாடிய விளையாட்டுக்களும் எங்கே
ஆடு , மாடுகளுடன் துள்ளி விளையாடிய
பச்சை பசேலென இருந்த வயல் வெளிகள் எங்கே
அனைத்தும் இன்று கனவுகளாக என் கண் முன்னால்
முன்னேற்றம் என்ற போர்வையில் சந்தோசங்களை
அழித்து புன்னகையும் ஒழித்து அனைத்தையும் இழந்த இந்த வாழ்க்கை உயிர் இருந்தும் பிணமானது போல் ……………………………….