Author Topic: பெண்களும் போற்றப்பட வேண்டியவர்களே  (Read 1000 times)

Offline thamilan

பெண்ணே
உன் நீதிதேவன் சபையில்
நாம் ஆண்கள் குற்றவாளிகள் தான்
ஒப்புக்கொள்கிறோம்

பாலூட்டும் தனங்களை கடித்து
ரத்தம் குடிக்கும் அட்டைகள் நாம்

எங்களை பெருகிறவள் நீ
எங்களால் இழப்பவளும் நீயே

நீ எங்கள் கண்களாய் இருந்தாய்
நாங்கள் உன் கண்ணீராக இருந்தோம்

நீ எங்கள் ஆடைகளாய் இருந்தாய்
நாங்கள் உன்முன்னே நிர்வாணமாய் இருந்தோம்

நீ எங்கள் முகவரியாய் இருந்தாய்
நாங்கள் உன் முகத்திரையாய் இருந்தோம்

நீ எங்கள் சிறகுகளாய் இருந்தாய்
நாங்கள் உன்னை அடைக்கும் கூண்டுகளாய் இருந்தோம்

நீ எங்கள் விடியலாய் இருந்தாய்
நாங்கள் உனது அஸ்தமன‌மாய் இருந்தோம்

நீ கர்ப்பக்கிரகமாய் இருந்தாய்
நாங்கள் உன்னை கழிவறையாய் மாற்றி விட்டோம்

எங்கள் வெற்றிக்குப் பின்னால் நீ இருந்தாய்
உன் தோல்விக்குப் பின்னால் நாங்கள் இருந்தோம்

வாழ்க்கை ச‌துர‌ங்க‌த்தில்
உன்னை வெட்டிய‌ப‌டியே முன்னேறிய‌வ‌ர்கள் நாங்க‌ள்

நாமே நீ இட்ட‌ பிச்சை தான்
உன்னை எங்க‌ளிட‌ம் கையேந்தும்
பிச்சைக்காரி ஆக்கிவிட்டோம்

தாய்மைக்காக‌ ச‌மைப‌வ‌ளே
உன் ச‌தையை தின்று
ப‌சியாறும் க‌ழுகுக‌ள் நாங்க‌ள்

நீ உன்னை விற்றால்
அது விப‌ச்சார‌ம்
நாங்க‌ள் எங்க‌ளை விற்றால்
அது திரும‌ண‌ம்

இந்திர‌னாகி உன்னை
க‌ற்ப‌ழிப்ப‌வ‌ரும் நாம் தான்
கெள‌த‌ம‌னாகி உன்னை
ச‌பிப்ப‌வ‌ரும் நாம் தான்

காத‌ல் கூட
நாம் உன‌க்கு விரிக்கும் வ‌லைதான்
தாலி கூட‌
நாம் உன‌க்கு பூட்டும் வில‌ங்கு தான்

அவ‌தார‌ங்க‌ளையும் தீர்க்க‌த‌ரிசிக‌ளையும்
பெருகிற‌வ‌ள் நீ
நாமோ உன்னை பாவ‌த்தின் பிற‌ப்பிட‌மாக‌
பெய‌ர் சூட்டுகிறோம்

பெண்ணே
உன் முன்னால் குற்ற‌ உண‌ர்ச்சியோடு
த‌லை குனிந்து நிற்கிறோம்
உன் பெண்மை எனும்
தெய்வீக‌ நெருப்பில்
எங்க‌ளை ப‌ரிசுத்தப்ப‌டுத்துவாயாக‌

Offline Global Angel

Quote
பெண்ணே
உன் முன்னால் குற்ற‌ உண‌ர்ச்சியோடு
த‌லை குனிந்து நிற்கிறோம்
உன் பெண்மை எனும்
தெய்வீக‌ நெருப்பில்
எங்க‌ளை ப‌ரிசுத்தப்ப‌டுத்துவாயாக‌

nice  ;)