சிரமம் இன்றிச் சம்பாதிக்க
திருமணம் என்ற பெயரில்
சில ஆண்கள் போடும்
...திட்டமிடல்.
தன்னை நம்பி வருபவளை
வாழ வைக்க முடியாத
கோழை கேட்கும்
யாசகம்.
வெட்கம் கெட்டவன்
பெண் வீட்டாரிடம் கேட்கும்
அன்புப் பரிசு.
தன்னையே தியாகம் செய்திடும்
அவளிடம்
அவன் கேட்கும்
கைக்கூலி.