Author Topic: உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள்!  (Read 1182 times)

Offline Global Angel

உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், வன்முறை, பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
சோகமான எண்ணங்கள், தினமும் ஒரு முறை யாவது, அனைவருக்கும் எழுந்து, அடங்குவது இயற்கையே. ஆனால், ஒரு சோக நினைப்பு, தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு மேல் ஒருவர் மனதை ஆக்கிரமிக்கும்போதோ, அன்றாட வேலைகளில் தடையை ஏற்படுத்தும்போதோ, அந்த நிலை தான், “மன அழுத்தம்’ என்றழைக்கப்படுகிறது.
பிரியமான நடவடிக்கைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பது, சோர்வு, சுறுசுறுப்பின்மை, தூக்கமின்மை, கவனத் தடுமாற்றம், முடிவு எடுப்பதில் குழப்பம், பசியின்மை அல்லது அளவுக்கு அதிகமாக உண்பது.
எந்த காரணமும் இன்றி, உடலில் எங்காவது வலி தோன்றுவது, எதிர்மறையான நிகழ்வுகளைத் தான் இனி சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் ஆகியவை, மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்.
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றும்; அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று தோன்றும். பெண்களிடையே மன அழுத்தம் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

மன ஓட்டங்களை கட்டுப்படுத்த திணறும்போது...
* நம்பகமான, அக்கறை கொண்ட நண்பர் களிடம், மனக் குறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
* உடல் ரீதியான, பாலுணர்வு ரீதியான துன்புறுத்தல்கள், பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலை, குறைந்த அந்தஸ்தில் இருப்பதை எண்ணி வருந்துதல், மற்றவர்களைப் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற தொடர் பொறுப்பு ஆகியவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன.
* உங்கள் மனதை சாந்தப்படுத்தும் இசை, தோட்டப் பராமரிப்பு, நல்ல புத்தகங்கள் படிப்பது, மனதுக்குப் பிடித்த உணவு உண்பது.
* உங்கள் மீதான நம்பிக்கையை இழக்காமல் இருப்பது.
* யோகா, தியானம் இவற்றை நாள் தவறாமல் செய்து வருவது.
மேற்சொன்ன நடவடிக்கைகள், உங்கள் மனதை இதப்படுத்தி, மன அழுத்தத்திலிருந்து வெளி வர உதவும்.

மாத்திரையை தவிருங்கள்!
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்தால், அதைத் தீர்க்க, நீங்கள் முழு முயற்சியில் இறங்க வேண்டும்.
மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறும்போது, முதல் கட்டமாக அவர்கள் பிரச்னையைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படுவர். இது நல்லது தான் என்றாலும், முன் பின் தெரியாத ஒருவரிடம், உங்கள் மனக் குறையைச் சொல்ல நீங்கள் தயங்கலாம்.
எனவே, மிக மிக நம்பிக்கையான நண்பர் ஒருவரிடம், உங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லுங்கள்; மனதில் உள்ள அனைத்தையும், கொட்டி விடுங்கள். உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர், நிச்சயம் இதற்கான தீர்வு சொல்வார்.
“மன அழுத்தம் தீர்க்க, மாத்திரை சாப்பிடுகிறேன்’ எனக் கிளம்புவதை விட, தற்காலிக உபாயங்களை நாடுவதை விட, மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்ப்பது நல்லது.
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
vaazhkayila nambikkai romba mukkiyamaana vizhayam ....saadharanama nambikai irunthaal mattum podhadhu namma mela namaku 1st nambikkai irukanum appothan edhuvairunthalum face pannuvom bayapadaama.... vaazhkaiku thevayana oru vishayam..