Author Topic: நல்ல பிள்ளை என்றால்…  (Read 730 times)

Offline Global Angel

நல்ல பிள்ளை என்றால்…
« on: February 01, 2013, 05:07:50 AM »
பிள்ளைகளைப் பெறுவது பாக்கியம் என்பர். ஆனால், எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக இருக்கின்றனரா? நல்ல பிள்ளை என்றால், யார் நல்ல பிள்ளை?
ஒருவருக்கு நான்கு பிள்ளைகள். எல்லாரையும் பாடுபட்டு வளர்த்து, நல்ல வேலை கிடைக்கச் செய்தார். ஒருவனுக்கு மும்பையில் வேலை, ஒருவனுக்கு டில்லியில் வேலை, ஒருவனுக்கு கோல்கட்டாவில் வேலை, ஒருவனுக்கு பெங்களூருவில் வேலை. இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. டாக்டர், "சந்தேகமான கேஸ்!’ என்று சொல்லி விட்டார்.
மும்பையில் இருக்கும் பையனுக்கு போன் செய்து உடனே வரச் சொன்னார். "இப்போது ஆபீசில் பிரமோஷன் நேரம். நான் அங்கு வந்தால், பிரமோஷன் பாதிக்கப்படும். நல்ல டாக்டரிடம் வைத்தியம் செய்து கொள்ளுங்கள்…’ என்று சொன்னான் அவன்.
டில்லியில் இருப்பவன், "நான் இப்போது வர¬ முடியாது. ஆபீசில் ஆடிட் நடக்கிறது. நான் அவசியம் இங்கே இருக்க வேண்டும். நல்ல டாக்டராகப் பார்த்து, வைத்தியம் செய்து கொள்ளுங்கள். பணம் வேண்டுமானால் அனுப்புகிறேன்…’ என்றான்.
அடுத்த பையன் கோல்கட்டாவிலிருந்து போன் செய்தான்… "என் மனைவிக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து, நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால், இப்போது வர¬முடியாது. நல்ல டாக்டராகப் பார்த்து வைத்தியம் செய்து கொள்ளுங்கள்…’ என்றான்.
நாலாவது பையன் பெங்களூருவிலிருந்து உடனே வந்து விட்டான். தகப்பனாருக்கு உதவியாக அவரோடு இருந்து கவனித்துக் கொண்டான். "ஏண்டா… நீ இங்கே இருந்தால் எப்படி? பெங்களூருல போய் வேலையில் சேர வேண்டாமா?’ என்று கேட்டார். அதற்குப் பையன், "உங்களை கவனித்துக் கொள்வதை விட, வேலை என்ன ¬முக்கியம்? இந்த வேலை இல்லா விட்டால், வேறு வேலை கிடைக் காதா? அதனால், உங்களை கவனித்துக் கொள்வதற்காக வேலையை ராஜினாமா செய்து விட்டு, வந்து விட்டேன்.
"ஒரு பிள்ளை என்பவன், தகப்பனாருக்கு கடைசி காலத்திலோ, உடல் நலமில்லாதபோதோ, கூடவே இருந்து கவனிக்க வேண்டியது கடமை அல்லவா? நீங்கள் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள். அதற்கு பலனாக, நான் வேறு என்ன செய்ய ¬முடியும்? உங்களுக்கு உடல் நலமில்லாத போது, நான் கூட இருந்து கவனிக்க வேண்டாமா? அப்படிச் செய்யாவிட்டால் இந்தப் பிள்ளையைப் பெற்றது எதற்கு?’ என்று சமாதானம் சொன்னான்.
அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. "நீ தான்டா என் நல்ல பிள்ளை!’ என்று சொல்லி, அவனை கட்டிக் கொண்டார். அதனால் தான், "பெற்றதெல்லாம் பிளளைகளல்ல!’ என்று கூறினரோ என்னவோ…
நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க வேண்டும்.