Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 20332 times)

Online MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #135 on: February 16, 2013, 10:55:40 PM »
"பீர்பால் கதை - பரிசு 50 கசையடிகள்"



மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர்.

அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ' இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் என்ன ?' என்று நினைக்கும் காவலாளி "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைக்கும் பரிசில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே விடுகிறான்.

உள்ளே சென்ற மகேஷ் தாஸ் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காண்பிக்க , " உனக்கு என்ன பரிசு வேண்டும் , கேள் ?" என்று கேட்க , "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் மகேஷ். ' இவனுக்கு என்ன பைத்தியமா ?' என்று நகைக்கின்றனர் சபையோர். ஆச்சரியமுற்ற அக்பரும் "ஏன் இப்படிக் கேட்கிறாய் ?" என்று கேட்க , " பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்கிறான் மகேஷ். 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி கூறுகிறான் மகேஷ். அப்போதுதான் மன்னருக்கு விஷயம் விளங்குகிறது.
வாயிற்காப்போனுக்கு 50 கசையடிகளும் , 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்த அக்பர் , மகேஷின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.

Online MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #136 on: February 16, 2013, 10:57:40 PM »
மிஸ்டர்.மொக்கையின் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டகாலம்..!
கடவுளை உள்ளம் உருக வேண்டினார்..




"சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"

குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து , மொக்கை ரொம்ப பீல் ஆயிட்டாரு.

அடுத்த மாத குலுக்கல் நேரம்.. மொக்கை இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ மொக்கையின் பக்கத்து வீட்டுக் காரனுக்கு..!

"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?

கடவுள் சொன்னார்..

" மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா மூதேவி..!"

Online MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #137 on: February 16, 2013, 10:59:22 PM »
"சுமை"



ஓர் ரயில் பயணி தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் எறி அமர்ந்தார்..

ரயில் அவரை இழுத்துக்கொண்டு பயணித்தது
ஆனால் அவரோ தமது மூட்டைகளை தாமே தலையில் சுமந்து கொண்டு பயணம் செய்தார்...

பகவான் ரமணன் கூறுகிறார்...

உண்மையில் மூட்டையையும் அந்த நபரையும் சேர்த்துதான் ரயில் பயணிக்கிறது..

சுமந்து கொண்டு சென்றாலும் சரிசுமக்காமல் இருந்தாலும்சரி இரண்டையும் இழுப்பது ரயில் அல்லவா...?

மூட்டை இறக்கிவைத்துவிட்டால் ரயில் இழுக்க மறுப்பதில்லை.
.
அவர் சுமந்து கொண்டு சென்றாலும் இற்க்கி வைத்தாலும் ரயிலின் சுமையின் மாற்றம் இல்லை..
கூடுவதில்லை..

அவருக்குதான் சுமை குறைகிறது..

இது போல்தான்வாழ்க்கை எனும் பயணத்தில் துயரம் எனும் சுமையை இறைவன் மீது இறக்கிவைத்தால் பயண்ம் எளிதாக இருக்கும்...
வீணாக சுமையை சுமக்கவேணடாமே..