Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 23278 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #90 on: February 09, 2013, 08:04:53 PM »

அம்மாவின் ஞாபகம்....

சுருதிக்கு மூன்று வயதாகிவிட்டது.
பள்ளியில் போடவேண்டும்..

கீரிச்...அவளுக்கு சரி வராது..

அவன் மனைவிக்கோ வங்கியில் புரமோஷன்.
மாலை 4 மணிக்கு வீடு வந்துவிடுகிற கதை நடக்காது..

அவனுக்கோ ஆபிஸில் பொறுப்புக்கள் அதிகம்..
இரவு எட்டு மணிக்குதான வீடு வந்து சேர முடியும்..

படு சுட்டி சுருதியை யார் பார்த்துக்கொளவது..
பொறுப்பாய்..

கணவனும் மனைவியும் சிந்தனையில் குழம்பினார்க்ள.
இதற்கு என்னாதன் தீர்வு...

சிந்தித்து சிந்தித்து மனடையை உடைத்தபிறகு அவர்களுக்கு அவர்களுக்கு ஞாபகம் வந்த்து..

இங்கு இட வசதி இல்லை..நகரம் உனக்கு ஒத்துவராது..
கிராமத்துக்கு அவன் தம்பிவீட்டுக்கு நாலு ஆண்டுக்கு முன் அனுப்பிவைத்த அம்மாவின் ஞாபகம்..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #91 on: February 09, 2013, 08:06:02 PM »

ஒர் இளம் பெண் கனவு காணுகிறாள்..

ஒர் அடர்ந்த காட்டு வழியே தனியே நடந்து வருவதாக..

அந்த பாதையில் கட்டுமஸ்தான இளைஞன் எதிர்படுகிறான்...

இந்த இளம் பெண் தனியே வருகிறாள் என்று தெரிந்துவிடுகிறது..

அவன்காம பார்வையை வீசுகிறான்..

தனக்கு அவனால் ஆபத்து என தோணுகிறது..
ஒட துவங்குகிறாள்..

இவள் ஒடுவதை பார்த்த அவன் அவளை துரத்துகிறான்.
.
'' தனியாக மாட்டி கொண்டாய்...........விடமாட்டேன்
''கத்திகொண்டே கிட்டதட்டஅவளை நெருங்கி விட்டான்,
,
அவள் ஒட முடியாமல் களைத்து ஓருமரத்தின் மீது சாய்ந்துவிடுகிறாள்..

அவளை கைகளால் அனைக்கும் நிலைக்கு வந்துவிடுகிறான்..

''ஐயோ..நீ என்னை என்ன செய்யப்போகிறாய்...''கதற ஆரம்பிக்கிறாள்..

அவன் சொல்கிறான்...''இது உன்னுடைய கனவு..அதை நீதான் முடிவுசெய்யவேண்டும்..''

...............................................................................................
கனவில் என்ன..வாழ்க்கையில் முடிவு நம் கையில் இருக்க மற்றவர்களை எதிர்பார்க்கிறோம்..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #92 on: February 09, 2013, 08:07:22 PM »


நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #93 on: February 09, 2013, 08:08:40 PM »

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா.

ஆடம்பரமாக விழா நடந்தது.
அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் , “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?” எனக் கேட்டார்.

“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!” என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #94 on: February 09, 2013, 08:10:01 PM »

ராமசாமி கடைவீதியில் வந்துகொண்டிருந்த போது ஓரத்தில் குடிகாரர் ...

''என்னை யாரும் நம்பர் 32 சந்தோஷபுரம் கொண்டு போய் விடமாட்டீங்களா...என்னாலே நடக்கமுடியலை..''

...கத்திகொண்டு.உருண்டு புரண்டுகொண்டிருந்தை பார்த்தார்...

நம்ம ராமசாமிக்கு பார்க்க கருனை பிறந்த்து...
என்ன மனிதர்க்ள...எதோ குடித்துவிட்டார்..இப்போது முடியவில்லை ..உதவி செய்ய ஒருத்தரும் இல்லையே..தெளிவாக முகவரி சொல்கிறார்..கொண்டு சேர்த்தால் என்ன..என்று பொருமிக்கொண்டே ஒர் ஆட்டோவை அழைத்தார்..
ஆட்டோக்காரரை இவர் சொல்லும் முகவரிக்கு போக எவ்வளவு ஆகும் என்றார்..

''50 ரூபாய் ஆகும் ''என்றார் ஆட்டோக்காரர்

இந்தா 50 ரூபாய்..இவரை அந்த இடத்தில் இறக்கிவிட்டுங்கள்..ராமசாமி

இந்த ராமசாமிக்கு யார் கஷ்டத்தில் இருந்தாலும் பார்த்துகொண்டிருக்க முடியாது என்று ஆட்டாகாரரிடம் பெருமையாக சொன்னார்..

ஆட்டோக்கார்ரஃ அந்த குடிகாரரை எற்றிய பிறகு சிரித்துகொண்டே சொன்னார்...
இந்த குடிகார ர் சொன்ன முகவரி டாஸ்மாக் கடை..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #95 on: February 09, 2013, 08:11:14 PM »

தன் தோற்றம் குறித்தும் திறமைகள் குறித்தும். தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி.

“நீ அழகாய் இருக்கிறாய். உன்னை நேசிக்கிறேன்” என்று அவளிடம் தந்தை அடிக்கடி சொல்லி வளர்த்தார்.

அவளது மனம் மெல்ல மெல்ல மாறியது.

ஊக்கம் உயர்ந்தது. உருவத்திலும் மாற்றங்கள் தென்பட்டன.

அழகிலும் அறிவிலும் தனித்தன்மை மலரும் விதமாய் வளர்ந்தாள்.

பதினெட்டாவது பிறந்த நாளில் பரிசு வழங்கிய தந்தை சொன்னார்,

“நீ மிகவும் அழகான குழந்தை. உன்னை நேசிக்கிறேன்”.

வள் தோழிகளிடையே அறிவித்தாள்,

“நான் அழகாய் இருப்பதால் என் குடும்பம் என்னை நேசிக்கவில்லை.
என் குடும்பம் நேசிப்பதால் நான் அழகாய் இருக்கிறேன்”.

நேசிக்க பழகுங்கள் உங்கள் உலகமே அழகாய் மாறும் !!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #96 on: February 09, 2013, 08:12:34 PM »

அந்தத் தெருவில் இரண்டு குதிரைகள் இணைந்தே திரியும்.

பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரியும்.

நெருங்கிப் பார்த்தால் ஓர் உண்மை புரியும்.

இரண்டு குதிரைகளில் ஒன்றுக்குக் கண் தெரியாது.

கண்தெரியாத குதிரையை அதன் உரிமையாளர் கட்டிப்போடவில்லை.

இன்னொரு குதிரையுடன் மேயவிட்டார்.

ஆனால் மிக வித்தியாசமாக ஒன்றைச் செய்தார்.

கண்தெரிகிற குதிரையின் கழுத்தில் சிறிய மணி ஒன்றைக் கட்டியிருந்தார்.

மணிச்சத்தம் கேட்டு ஊனமுற்ற குதிரை,

அடுத்ததைத் தொடரும்.

அந்த உரிமையாளர் செய்ததைத்தான் கடவுளும் செய்கிறார்.

ஒவ்வொரு குறைபாட்டுக்கும் மாற்று ஏற்பாட்டை மறக்காமல்
செய்துள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #97 on: February 09, 2013, 08:13:50 PM »

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன்
ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது..

அது வைரம் என்றறியாமல்,
விலை போகுமா என்ற
சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்..

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன்,
இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்..

ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற
எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான்..

ஐந்து ரூபாய் அதிகம்
கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20
ரூபாய்க்கு பேரம் பேசினான்..

இதைக் கவனித்த
மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்..

ஆத்திரமடைந்த வியாபாரி,
அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட
முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும்... அறிவில்லாமல்
விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்..

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய
மதிப்பு அவ்வளவுதான்..
ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய
முட்டாள்” என்றான்..

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும்,
கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #98 on: February 09, 2013, 08:15:27 PM »


புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.

தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்

.உடனே அமைச்சர்

,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.

நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்

. தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்
இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.

ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.

உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே

பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து,

''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!.

தொழில் அதிபரே அசந்து விட்டார்.

அரசியல்வாதியா,கொக்கா?

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #99 on: February 09, 2013, 08:16:48 PM »

ஒரு ஊர்ல ஒரு நம்ம ஆளு நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்..

அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு..
நம்ம ஆளு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி
” டாக்டர்அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.

அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு..
அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நம்ம ஆளு வாய்க்குள்ள அப்புனாரு..
நம்ம ஆளு கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.
” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!

நம்ம ஆளு அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு..
இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி
” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு
இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.
என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.
.என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.
. நம்ம ஆளு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”
ன்னாரு..
அப்ப கெளம்பி ஓடுனவர்தான் ..நம்ம ஆளு எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே…!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #100 on: February 09, 2013, 08:17:59 PM »

ஒரு செல்வந்தன் தன் தந்தைக்கு,
ஓர் ஓட்டிலே கஞ்சி வார்த்துக்
கொடுத்துக்கொண்டு வந்தான்..

அவன் பிள்ளை ஒருவன் நீண்டநாட்களாக தந்தையின்
செயலை பார்த்தபடியே இருந்தான்..

ஆனால்
அவன் இதயத்தில்
வேதனை பொங்கிவழிந்தது.

ஒருநாள் அவரின் மகன் அந்த ஓட்டை எடுத்து ஒளித்து வைத்துவிட்டான்.

அந்த செல்வந்தத் தந்தை மாலை உணவைத் தன்
தந்தைக்கு கொடுப்பதற்காக வந்து ஓட்டைத்
தேடிவிட்டு தந்தையாரிடம் “அந்த ஓடு எங்கே?” எனக்
கேட்டார்..

அவரோ “நானறியேன்” என்றார்..

உடனே தனது மகனிடம்
சென்று “தாத்தாவுக்கு உணவு கொடுக்கும் அந்த ஓட்டைக்
காணவில்லை..
நீ கண்டாயா?” என அதட்டிக் கேட்டார்..

அவனும் தெரியாது என சொல்ல கோபத்துடன், தந்தையாரின்
பக்கம் திரும்பிய செல்வந்தர் தந்தையிடம்,
“எங்கே உனது ஓடு?” என்று கோபமாகக்
கத்தியபடி சண்டையிட்டார்..


இதைக் கவனித்துக்கொண்டிருந்த மகன்
வேதனையோடு ஓடிச்
சென்று, தனது தந்தைப் பிடித்து தடுத்தபடி, “அந்த
ஓடு என்னிடம் தான் இருக்கிறது” என்றான்..


“இதை நீ எதற்கு எடுத்து ஒளித்து வைக்கிறாய்?” என்று அந்த
செலவந்தர் மகனைச் சத்தம் போட்டார்..

“நான் பெரியவனான பின் உங்களுக்கும் வயதாகிவிடும்..
அப்போது நாங்கள் உங்களுக்கு உணவு பரிமாற வேண்டி வரும்..
அதற்கு ஓடு தேவைப்படுமே...
அதற்காக நான்
அதை எடுத்து உங்களுக்காக
பாதுகாத்து ஒளித்து வைத்திருக்கிறேன்” என்றான்..

அப்போதுதான் அந்தச் செல்வந்தனுக்கு தன் தவறான செயலைப்
பற்றித் தெளிவு பிறந்தது. அப்போது முதல் தன்
தந்தையை நல்ல முறையில் பாதுகாக்கத் தொடங்கினான்...

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #101 on: February 10, 2013, 08:57:37 PM »


பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!


மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
நன்றி!!

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #102 on: February 10, 2013, 09:01:44 PM »


கற்றது கையளவு...

புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார்..
அப்போது அங்கு வந்த புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தன் புத்தரிடம், “குருவே, நான் இந்த உலகத்தைத்
தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.. எப்படி?” என்று கேட்டார்..

புத்தர் அவரிடம், “இந்த மரத்தில் ஏறி தழைகளைப்
பறித்து வா!” என்றார்..

ஆனந்தன் அந்த மரத்தின் மேல் ஏறி கைகொள்ளும்
அளவுக்குத் தழைகளைப் பறித்துக்கொண்டு கீழிறங்கி வந்தார்..

புத்தர் அவரைப் பார்த்து, “ஆனந்தா, இப்போது உன்
கையில் என்ன உள்ளது?” என்று கேட்டார்..

“தழைகள் குருவே” என்றார்..

“அப்படியானால்.. மரத்தில்...?”
என்று திருப்பிக் கேட்டார் புத்தர்..

“மரத்தில் நிறைய தழைகள் இருக்கின்றன” என்றார் ஆனந்தன்..

உடனே புத்தர்,
“ஆனந்தா, இந்த உலகத்தைத்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று சொன்னாயே...
அது இதுதான்..
நான் உனக்குப் போதித்தது உன்
கையிலுள்ள அளவுதான்..
நான் உனக்குப்
போதிக்காதது மரத்திலுள்ள தழைகளின் அளவு..
அவ்வளவையும் என்னால் போதிக்க முடியாது..
நீ இந்த உலகத்தை
உன் அனுபவத்தால்தான் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்” என்றார்..

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #103 on: February 10, 2013, 09:06:57 PM »


ஒருத்தன் இண்டர்வ்யூ போனானாம். ஆஃபீஸர் டேபிள்மேல துப்பாக்கிய வெச்சு, ‘நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை’ன்னாராம்.

”பொண்டாட்டியக் கொன்னு, கிடைக்கற வேலை வேணாம்”ன்னுட்டு போய்ட்டான் அவன்.

ரெண்டாவது வந்தவன்கிட்டயும், ஆஃபீஸர் அதையே -நெக்ஸ்ட் ரூம்ல உன் பொண்டாட்டி இருக்காங்க. அவங்களை ஷுட் பண்ணினா, உனக்கு இங்க ஒரு லட்சம் சம்பளத்துல வேலை –சொன்னார்.

அவன் துப்பாக்கிய எடுத்துட்டு நேரா அந்த ரூமுக்குப் போனான். அங்க அவனோட மனைவி நின்னுட்டிருந்தாங்க. அவங்க முகத்தைப் பார்த்ததும் மனசு மாறி, துப்பாக்கியை ஆஃபீஸர்கிட்டயே குடுத்து

‘போய்யா – நீயும் உன் வேலையும்’ன்னுட்டுப் போய்ட்டான்.

மூணாவது ஒருத்தன் வந்தான். அவன் பொண்டாட்டி, நெக்ஸ்ட் ரூம்ல இருந்தாங்க. அவன்கிட்டயும் ஆஃபீஸர் அதைச் சொன்னார். அவன் துப்பாக்கியத் தூக்கீட்டு அந்த ரூமுக்குப் போனான்.

கொஞ்ச நேரத்துல அந்த ரூம்லேர்ந்து அவனோட மனைவி ‘ஐயோ.. அம்மா’ன்னு அலர்ற சத்தம்.

ஆஃபீஸர் ஓடிப் போய்ப் பார்த்தார். மனைவி தலைல ரத்தம் ஒழுகுது. வந்த ஆஃபீஸர் ஓடிப்போய்த் தடுக்க, அவன் சொன்னான்:

“சார்…. கொல்லச் சொல்லீட்டு உள்ள புல்லட் வைக்காம குடுத்துட்டீங்க. அதான் திருப்பிப் போட்டுச் சாத்தீட்டிருந்தேன்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226592
  • Total likes: 28986
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #104 on: February 10, 2013, 09:13:18 PM »
பின்னால் வரும் :)



ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது. என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.

இதை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.

முதல் நாய் சொன்னது, ''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன். அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார். அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,''

இரண்டாவது நாய் சொன்னது, ''அன்பு நண்பனே , நானும் அந்த மகானைப் பார்த்த போது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார். நானும் முயற்சி செய்து பார்த்து விட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன். ஆனால் அதற்குப் பின் அதைப் பற்றிக் கவலைப் படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன். ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது. அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''

டிஸ்கி : நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது. நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால், மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.