Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 20309 times)

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #120 on: February 14, 2013, 10:58:00 PM »

காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி,

அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.
நாலாவது நாள்...
பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது.
அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால்,
எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை
பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.
அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர்

. யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)


அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார்.

நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.

இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி,தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.

காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு,

தேடுதல் வேட்டையைத் துவங்கியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில்,

ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும்கண்டுபிடித்துவிட்டார்கள்.

புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,செல்வமோ கிடையாது.

நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #121 on: February 14, 2013, 11:17:12 PM »

குப்பு சுப்பு ரெண்டு பேரும், இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு.

கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே சுப்பு எடுத்தாரு ஓட்டம்,

ஆனா குப்பு தன்னோட பேக்-ல இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு “ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா? சீக்கிரம் வா புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்” மின்னு சொன்னாரு

“நெசம் தாம்லே புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #122 on: February 14, 2013, 11:34:54 PM »

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #123 on: February 14, 2013, 11:38:02 PM »

மிகப் பெரிய பூங்கா அது. பூக்கள் பல வண்ணங்களில் சிரித்தன..போவோர், வருவோர் எல்லாம் பூக்களை கிள்ளிச்
சென்றனர். அது தோட்டக்காரனுக்கு வலித்தது.
ஒரு பலகையில் பூக்களைப் பறிக்காதீர்கள் என்று
எழுதி வைத்துச் சென்றான். அன்று முதல் யாரும்
பூக்களின் மீது கை வைப்பதில்லை.
ஒரு நாள் காற்று கொஞ்சம் பலமாக அடித்தது.
பூக்களின் சில இதழ்கள் உதிர்ந்தன. அதைப் பார்த்த
தோட்டக்காரன் சொன்னான். “பாவம், காற்றுக்குப்
படிக்கத் தெரியாது’

ஆம். நல்ல இதயம் உள்ளவன் பூக்களுக்குத்
தோழனாகவும் இருப்பான். காற்றையும் பகைத்துக்
கொள்ளமாட்டான்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #124 on: February 14, 2013, 11:41:33 PM »

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை.
அத்துடன் கோபம் வேறு பொங் கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது.

ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென் றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #125 on: February 16, 2013, 09:15:48 PM »

கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் பக்கத்திலிருந்த நகரத்திற்கு சென்றார்கள்.அங்கு ஒரு மதுக் கடையைப் பார்த்தவுடன் உள்ளே நுழைந்தவர்கள் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.

நீண்ட நேரம் சென்றபின் ஒருவன் சொன்னான்,''டேய் மாப்பிள்ள,கடைசி பேருந்தைப் பிடித்தாவது ஊருக்குப் போக வேண்டுமே,''என்றான்.உடனே இருவரும் பேருந்து நிலையம் சென்றனர்.அப்போது கடைசிப் பேருந்து போய்விட்டிருந்தது.என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.

உற்சாகமாக ஒருவன் கத்தினான், ''பக்கத்தில்தானே பேருந்து டெப்போ இருக்கிறது!ஏதாவது ஒரு பஸ்ஸை வெளியே எடுத்து நாமே ஓட்டிக் கொண்டு நம் ஊருக்குப் போனால் என்ன?''என்று கேட்க முழு போதையில் இருந்த அடுத்தவன்,''நானே சென்று பேருந்தை எடுத்து வருகிறேன்,''என்று கூறி உள்ளே சென்றான்.நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வரவில்லை.திடீரென பல பேருந்துகளை இடித்துக் கொண்டும் சேதப்படுத்திக் கொண்டும் ஒரு பேருந்து வெளி வந்தது.அதை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.

''ஏண்டா இவ்வளவு நேரம்?''என்று இவன் கேட்க அவன் சொன்னான்,''என்ன செய்வது? நம்ம ஊருக்குப் போற பேருந்தைக் கடைசியில் நிறுத்தி வச்சிருந்தாங்க.அதைத் தேடி எடுத்து வர தாமதமாயிருச்சி,''

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #126 on: February 16, 2013, 09:19:58 PM »


ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்..

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரையும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..

''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்..

''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்..

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி..

அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்..

''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே...''என்றான் கணவன்..

''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி..

''பிராமாதம்..'' என்றான் கணவன்..

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..

''நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்..'' அந்த விருந்தாளிதான்..

கதையின் நீதி...நடிப்பு என்றுமே உதவாது...

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #127 on: February 16, 2013, 09:29:46 PM »


திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.

ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான்.அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை. அவன் தயங்கியவாறு நின்றிருந்தான்.திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''அய்யா,என்னைத் தவறாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்.என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர்.அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன்.அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.

''அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #128 on: February 16, 2013, 09:59:12 PM »


ஊரில் ஒரு பெரிய மனுஷன்.

புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள...தன் மகன்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தாராம்.

ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி... தன் வீட்டின் ஒரு அறையை பூராவும் நிறைக்க வேண்டும் என்பதே அந்தப் போட்டி.

ஒரு மகன் விவசாயி.

ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கோலாய் வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பாவம், அறை கால்வாசிகூட நிரம்பவில்லை.

அடுத்த மகன் வியாபாரி.

ஆயிரம் ரூபாய்க்கும் பஞ்சு வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பரிதாபம், அறை அரைவாசிகூட நிரம்பவில்லை.

கடைசி மகனோ அரசியல்வாதி.

அவன் ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுவர்த்தி அறையில் ஏற்றினானாம்.

அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.

பெரியவர் மற்ற இரு மகன்களைப் பார்த்து பெருமையாய் சொன்னாராம்.

"புரிந்ததா புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று.?"

கேட்டதும் மகன்கள் இருவரும் தலையைக் குனிய, அரசியல்வாதி மகனின் பிஏ தனக்குள் முணுமுணுத்தானாம்.

"ஆமாமா... எந்த லூஸாவது 'மீதி தொள்ளாயிரத்து தொண்ணூதொம்பது ரூபா எங்கே'னு கேட்டுச்சா பாரு.!!!".
.
.

அந்த லூசுங்க நாம் தானா ???

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #129 on: February 16, 2013, 10:07:30 PM »


ஒரு மனிதர் அன்பு சேவை இவைகளை மையமாக வைத்து வாழ்ந்து வந்தார்..

யாரோ ஒருவர் ''கடவுளை நேசிக்கும் மனிதர்கள் ''பற்றி பட்டியல் இருக்கும் புத்தகம் ஒன்று வைத்துள்ளார் என்று கேள்விப்பட்டு அவரை தேடிப்போய் அந்த புத்தகத்தை பார்த்தார்...

அந்த புத்தகத்தில் அவரது பெயர்எங்கு தேடியும் இல்லை....

அடுத்த ஆண்டும் அவரை சந்தித்து அந்த புத்தகத்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா பார்த்தார்..

அவர் பெயர் இல்லை..

புத்தகத்தை அளித்தவர் ''கடவுள் நேசிக்கும் மனிதர்கள் என்ற சின்ன புத்தகம் உள்ளது அதில் இருக்கிறதா பாருங்கள் ''என்றார்..

அந்த புத்தகத்தில் அவரது பெயர் முதலாவது பக்கத்திலேயே இருந்தது...


பிறரை நீங்கள் நேசித்தால்... பிறரும் உன்னை நேசிப்பர்...

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #130 on: February 16, 2013, 10:15:23 PM »

ஒரு பெரிய நிறுவனத்தில
வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி நோய்
வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.

பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்
பார்த்து,
மருந்து ,இஞ்செக்ஷன் எல்லாம்
வாங்கிப் போட்டும்,
எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
-
கடைசியில் அவனுடைய
புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம்
பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல
வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)
போய் உடம்மைபைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்கு சரியான
ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.
-
என்னது மிருக டாக்டர்கிட்டேயா ?
உனக்கென்ன மூளை கெட்டுப்
போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
-
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான ் எல்லாமே கெட்டுப்
போய் கிடக்கு!
காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்
க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி ‘லபக்
லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு ,
பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக
ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
-
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க
மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே,
ஆடு மாடுங்க
மாதிரி பஸ்லே அடைஞ்சு
வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும்
வராததுமா,
நாள் பூராவும் வேலை செஞ்ச
களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க!
அப்புறம்
முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக்
சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி போய்
படுத்து தூங்கறீங்க!
-
மறுபடியும்
விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனுஷ
டாக்டர்
எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன்,
நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப்
போய் பாருங்க!”
என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்
மனைவி.
-
என்ன பதில் சொல்வதென்று தெரியாம
கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’
போங்கன்னு உதாரணம் வச்சாளாம்
மனைவி..

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #131 on: February 16, 2013, 10:44:44 PM »


மன்னர்: யாரங்கே!!

அமைச்சர்: சொல்லுங்கள் மன்னா....

மன்: இதுவரை நான் கண்டிறாத பழங்களை உன்ன விருப்பம் எனக்கு,, விரைவில் ஏற்பாடுசெய்யுங்கள்...

அமைச்: உத்தரவு...

சபைகூடுகிறது!!!

மன்னா இதோ இங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் விதவிதமான கணிகளை கொன்டுவந்துள்ளனர்.

மன்: நான் உண்ட கனி இருக்குமெனில் அதை கொண்டுவந்தவனை விழுங்கச்செய்துவிடுவேன் என எச்சரியுங்கள்.... வரச்சொல்லுங்கள்,,,...

முதலில் வாழைபழத்தோடு வருகிறான் ஒருவன்..

மன்: இது நான் உண்டு இரசித்த கனியாதலால் நீரே விழுங்கிவிடு....

உத்தரவு...

மற்றொருவன்: மன்னா இதோ மாங்கணி...

மன்: யாம் இதையும் உண்டுவிட்டோம்.. நீயே விழுங்கு..

உத்தரவு....

இன்னொருவன் அண்ணாச்சி பழத்தோடு வருகிறான்..

மன்: இதையும் யாம் உண்டுவிட்டோம் ... அப்படியே விழுங்கு...

இவனும் விழுங்குகிறான்... வாயெல்லாம் இரத்தம் வழிகிறது.. இருந்தும் சிரித்தவாறே விழுங்குகிறான்...

மன்: என்ன?இரத்தம்வழிகிறது என்வாயில்... இருப்பினும் ஏன்இந்த சிரிப்பு.. சொல்லிவிட்டு விழுங்கு...

அது வேறொன்றும் இல்லை மன்னா.... எனக்குபின்னால் ஒருவன்பலாபழத்துடன் நிற்கிறான்.. அவன்நிலையை நினேத்துப்பார்த்தேன்.. அதான் சிரிப்பை அடக்கமுடியவில்லை... அதான் ஹாஹாஹாஹாஹா...

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #132 on: February 16, 2013, 10:48:43 PM »
''பிட்''



வழக்கம் போல் சிவா கல்லூரி இறுதி தேர்வுக்கு உடலின் எல்லா இடங்களிலும் பதில் களை தயார் செய்து 'பிட்' வைத்திருந்தான்..

ஆனால் நடந்தது வேறு..கண்டிப்பான ஓரு கண்காணிப்பாளரை தேர்வு எழுதும் அறைக்கு நியமித்துவிட்டார்கள்..

அறைக்குள் நுழையும் முன்னேரே ஓவ்வொருவரையும் முழமையாக சோதனைபோட்டே அறைக்குள் அனுப்பிவைத்தார்..

சிவா வால் தப்பமுடியவில்லை..மூன்று நாடகளாக இரவு பகலாக பிட் எழுதியது அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட்டது..

பறி முதல்செய்த கணகாணாப்பளருக்கு ஆச்சரியம்..

நுணுக்கி நுணுக்கி எழுதி இவ்வளவு தாள்களா..

பறி முதல் செய்த கண்காணிப்பாளர் கேட்டார்..

''இவ்வளவையும் நீதான எழுதினாயா..?''

''ஆம்''
'எல்லாம் போச்சு ''என்றான்..
''கிட்டதட்ட முழுபாடத்திற்கும் தயார் செய்திருப்பாய் போலிருக்கிறது..
உள்ளே உள்ளவர்கள் யாரும் இந்த அளவுக்கு படித்துஇருக்கமாட்டார்க்ள..
நீ எழுதிபார்த்திருக்கிறாய்..
இப்போது உனக்கு வேண்டியது நம்பிக்கை..எழுதிய பிட்டின் கருத்துக்கள் உன்னுள் எறியிருக்காலம் ..வெளுத்து கட்டு..''
என்றார்..

வேண்டா வெறுப்பாக முதல் கேள்விக்குபதில் எழத ஆரம்பித்தான்..

முதலில் சற்றே தடங்கல்..
அப்புறம் சரளமாக வந்தது...
தேர்வு தாளை தரும்போது கண்காணிப்பளரிடம் சொன்னான்..

''எனது கண்ணை திறந்தீர்க்ள ..நன்றி ஐயா..''என்றான்

# யானையின் பலம் அதற்க்கு தெரியாது..

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #133 on: February 16, 2013, 10:51:11 PM »
தென்னாலிராமன் கதைகள்- நீர் இறைத்த திருடர்கள்



ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.
இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.
"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.
"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.
அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.
திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.
பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.
சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.
இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.
அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.
திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #134 on: February 16, 2013, 10:53:50 PM »
முல்லாவின் கதை - "கடன் வாங்கிய ஏழை"



முல்லா ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். "ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைகண்டு மனம் பொறாமால் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டான் அது இப்பொழுது வட்டிக்கு வடடியெனக் கூடி இனறு இத்தொகையினைத் திருப்பிக்கொடுக்க முடியாது தினறுகின்றான். அவன் தற்கொலை செய்து விடுவானோ என்று கூட எனக்குப்பயமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஆயிரம் பொற்காசுகள் அந்த மனிதனுக்கு அவனின் கடனை அடைப்பதற்கு கொடுத்தால் அவன் உரிய காலத்தில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்" என்று முல்லா மிகவும் உருக்கமாகக் கூறினார்.

அதைக்கேட்டு மனம் உருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து "அவ்வளவு கஷ்டப்படும் மனிதன் யார்?" என்று கேட்டார். "வேறு யாருமல்ல நான்தான்" என்று கூறிச்சிரித்தவாறு முல்லா சென்று விட்டார். இரண்டொரு மாதங்கள் கழித்து முல்லா அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். இரண்டொரு மாதங்கள் கழிந்தபின்பு மீண்டும் ஒருநாள் முல்லா அப்பணக்காரரிடம் வந்தார். "யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கஷ்டப்படுகின்றாராக்கும் அதை என்னிடம் வாங்கிக் கொடுக்க வந்நிருகின்றீராக்கும்" என்றார் செல்வந்தர். "ஆமாம்" என்றார் முல்லா.

"அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே" என்று செல்வந்தர் கேட்டார். "இல்லை உண்ணமையிலையே ஒரு ஏளைதான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றான்" என்றார் முல்லா. "உம்மை எவ்வாறு நம்புவது பணத்தை வாங்கிய பின் 'நான்தான் அந்த ஏழை' என்று கூறமாட்டீர் என்பதற்கு என்ன நிச்சயம்" என்று செல்வந்தர் கேட்டார். "நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறேன்" என்றார் முல்லா.

பிறகு வாசல்ப்பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார். " நீர்தான் கடன் வாங்கி கஷ்டப்படும் ஏழையா? " என்று கேட்டார் செல்வந்தர். "ஆமாம்" என்று அந்த ஏழை பதில் சொன்னான். செல்வந்தர் முல்லா சொன்ன தொகையினை ஏழையிடம் நீட்டினார். அதனை முல்லா கை நீட்டி வாங்கிக்கொண்டார். " என்ன பணத்தை நீர் வாங்குகிறீர் பளையபடி என்னை ஏமாற்றுகிறீரா?" என செல்வந்தர் கேட்டார். " நான் பொய் சொல்ல வில்லையே கடன்வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடனை இப்பொழுது வசூல் செய்கிறேன்" என்று கூறியவாறு ஏழையை அழைத்துக்கொண்டு முல்லா நடந்தார்.