Author Topic: விவேகமானவரா மாற வேண்டுமா?  (Read 1274 times)

Offline Global Angel

தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு, பொறுமையும் இருக்க வேண்டும். “இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா…’ என்று சிலர் சொல்லலாம்.

பின்னே எது தான் வேண்டும்? எது, வாழ்க்கைக்கு உதவக் கூடியது, எது, அறிவை வளர்ப்பது, எது, மன நிம் மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும்.

பருத்தி பளபளப்பாக உள்ளது போல் சான் றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமையால் சுவையற்றது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட் டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர் களின் குறை, குற்றங்களை நீக்க பல இன்னல்களை மேற்கொள் கின்றனர்.

சான்றோர் நட்பு (சத்சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறி விடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று முனிவரானார்.

ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று, அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத் சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற் பட்டது.

சத் சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல் வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும்.

சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல், சித்திகள் ஏற்படாது.

சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண் பன்-பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர்.

சான்றோர் தூய உள்ளம் கொண்டவர் கள், உலக நன்மையை நாடுபவர்கள், உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர்.

நாமெல்லாம் எப்படியோ… சான்றோர் வரிசையில் சேர முடியுமா? எண்ணம்தான் காரணம்!
- வைரம் ராஜகோபால்