தர்பூசணி மசாலா
தேவையானவை: தர்பூசணி – கால் கிலோ, தக்காளி – 3, வெங்காயம் – 2, பட்டை, கிராம்பு – தலா 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது, தேன் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தர்பூசணியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த வெங்காயம்-தக்காளி பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். கிரேவி பதம் வந்ததும், நறுக்கிய தர்பூசணியைச் சேர்த்துக் கலந்து, வெந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன், தேன் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: தர்பூசணியை பழமாக மட்டும் சாப்பிடாமல், இப்படி மசாலாவாகவும் செய்து சாப்பிடலாம். தேன் கலப்பதால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.