Author Topic: வாருங்கள் கவிதைகள் பற்றி பேசலாம்...  (Read 9519 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
ஒரு பத்தியை கிட்ட தட்ட ஐந்துவிதமாய் மாற்றி பார்த்திருக்கிறோம், ஐந்து ஆறாம் வடிவத்தில் சில வார்த்தைகள் கூட குறைய இருக்கிறது

ஒரு கருத்த்தை வெவ்வேறு விதமாய் சொல்லி பார்த்திருக்கிறோம், இதில் கூர்மையான வடிவமாய் எனக்கு தோன்றியது 3 மற்றும் 5வது வடிவங்கள்

இந்த‌ வ‌டிவ‌ சோத‌னைக‌ள் க‌விதையில் இன்னும் ப‌ல‌ கோண‌த்தை கூட்ட‌ உத‌வுவ‌தை அனுப‌வ‌ பூர்வ‌மாக உண‌‌ர்ந்திருக்கிறேன்

இப்ப‌டி ஒவ்வொரு ப‌த்தியிலும் சில‌ சோத‌னைக‌ளை செய்து எழுத‌ முய‌ல்வ‌த‌ன் மூல‌ம் க‌விதை வ‌டிவ‌ம் மேலும் சிற‌ப்பான‌தாக‌ அமையும்

க‌விதை ஒரு ரூப‌ம‌ற்ற‌ நிலைக்கு ந‌க‌ர்ந்து கொண்டிருக்கிற‌து, ஒரு புள்ளியில் வடிவமிழந்து, வகைமை இழந்து, அழகு இழந்து, த‌ன் முழுமை அனைத்தையும் இழ‌ந்து எது தான் எனும் த‌ன்மை இழ‌ந்து,  எது க‌விதை எனும் கேள்விக்கு போய் நிற்கும்



அந்த‌ புள்ளி மீண்டும் க‌விதைக்கான ஒரு புத்தில‌க்க‌ண‌ம் எழுதிய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ த‌ருண‌த்திற்கு ஆளாகும்

அப்போது இதுகாறும் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌விதைக‌ள் ஒட்டு மொத்த‌மாய் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட‌வும், ஒரே அடியாய் புற‌ந்த‌ள்ள‌ப்ப‌ட‌வும் வாய்ப்பிருக்கிற‌து அல்ல‌து வ‌லிய‌ன‌ வாழும் எனும் த‌த்துவ‌ப்ப‌டி செழுமையான‌மை செறிவான‌வை உய்த்திருக்க‌ வாய்ப்பிருக்கிற‌து, அந்த‌ உய்வில் நாமும் உய்க்க‌ ஒரு முறையேனும் பிர‌ய‌த்த‌னிக்க‌ வேண்டாமா ?

அப்ப‌டி ஒரு க‌விதையை எழுத‌ முய‌ல்கிறோம் எனும் திருப்தியும், நேர்மையும், குறைந்த‌ கால‌மாவ‌து ந‌ம் க‌விதைக‌ள் வாழ‌ ஒரு வெளியை த‌ரும், அத‌ற்காக வேணும், புது வ‌டிவ‌ங்க‌ளை முய‌ல்வோம்


மேலும் பேசுவோம் ..
அன்புடன் ஆதி

Offline Global Angel

உண்மைதான் .. பெரும்பாலும் கவிதை எழுத ஆரம்பிபவர்கள் யாருடையாவது மொழி நடை சாந்த நடை கற்பனை கோர்புகளை வழி நடையாக கொண்டு ஆரம்பிபதால் சரக்கு சீக்கிரமே தீர்ந்து போய்விடுகின்றது .... கவிதை அதை நம் சொந்த முயற்சியில் ஆரம்பித்து ஆதி நீங்கள் சொல்வது போல் கற்பனைகளை புரட்டி போட்டு ஒபிட்டு வார்த்தை கோர்ப்புகளில் கவனம் செலுத்தினால் கவிதை நமக்கு அடிமை சாசனம் எழுதி தந்துவிடுவது உறுதி ...  ஒரு கவிதையை எதனை எதனை கோணங்களிலும் எழுதலாம் என்பதற்கு நம் மன்ற கவிஞரான டாங் லீ கவிதையை எடுத்து பெயசியது சிறப்பு .....  தங்களிடம் கவிதை பற்றி வற்றாத ஜீவா நதியாய் பல கருத்துகள் இருக்கிறது ... வந்து கொண்டே இருக்கிறது ... பலர் நீச்சல் அடித்து கொண்டே இருகின்றார்கள் இதில் .. பல சிறந்த கவிங்கர்களை உருவாக்கும் உங்கள் இந்த படைப்பு தொடரட்டும் ஆதி ..
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
எதார்த்தமாக கவிதை பகுதியின் கடைசி பக்கத்துக்கு போன போது காண நேரிட்டது

குளோபல் ஏஞ்சலின் ஹைகூ கவிதைகள் திரியை, மூன்று கவிதைகள் எழுதியிருக்கிறார்

அது ஹைகூ இல்லையா என்ற விவாததுக்குள் நாம் போக வேண்டாம், ஹைகூகள் பற்றி முன்பே இந்த திரியில் மூன்று பதிவுகள் எழுதப்பட்டுவிட்டது

ஆதலால் குளோபலின் கவிதை திரியில் இருக்கும் மூன்று கவிதைகளில் ஒரு கவிதை பற்றி மட்டும் பேசுவோம்

//ஏழ்மை


பள்ளிக்கூடத்திற்கு
செங்கல் சுமக்கும்
சிறுமி

//



இந்த கவிதையை வாசித்த பிறகு மனதில் உண்டான கனம் இன்னும் அகலவில்லை

பள்ளி கூடம் செல்ல வேண்டிய வயதில் பள்ளி கூடம் கட்டவோ, அல்லது பள்ளி கூடத்தில் நிகழும் ஒரு சீரமைப்பு பணிக்கு, அல்லது சுற்று சுவர் எழுப்பலுக்கு கல் சுமக்கக்கும் சிறுமி இங்கு கட்சிப்படிமம் ஆக்கப்படிருக்கிறாள்

புத்த‌க‌மோ, சிலேட்டு ப‌ல்ப‌மோ, பென்சில் பேனாவோ இருக்க‌ வேண்டிய‌ கைக‌ளில் செங்க‌ல்

ப‌ல்ப‌ ப‌ட‌ல‌ம் ப‌டிந்திருக்க‌ வேண்டிய‌ கைக‌ளில் சிம‌ண்டு ப‌ட‌ல‌ம்

விளையாடி க‌லைக்க‌ வேண்டிய‌ வ‌ய‌தில் வேலை செய்து உட‌ற்சோர்வு கொள்ள‌ வேண்டிய‌ நிலை

ஏழ்மை எவ்வ‌ள‌வு கொடுமை

இந்த‌ காட்சி ப‌டிம‌த்தை வாசித்த‌ த‌ருண‌த்தில் ஔவை தான் நினைவுக்கு வ‌ந்தாள்

கொடியது கேட்கின் நெடிய வெவ்வேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

அன்புடன் ஆதி

Offline Global Angel

சிறப்பான விளக்கம் ஆதி .. ஹைக்கூ கவிதைகள்கு இருகின்ற தனித் தன்மையே அவை சுருங்க கூறி பரந்த கருக்களை கொண்டிருபதுதான் ... நன்று மேலும் தொடருங்கள் ஆதி
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
குளத்தில் கல்லொன்று
எறிந்துவிட்டான்
சலனமின்றி குளம்

-கவிஞர் ரேமா

பெரும்பாலும் நாம் கடந்து வந்தவைகள் எல்லாம் குளத்தில் கல்லெறிந்த மாதிரி எனும் சலனம் உவமைகள் தான்

இங்கு சலன‌மின்றி இருக்கிறது கல்லெறிந்த பின்னால், அழகிய முரண்

குளத்தை ஒரு மிக பெரிய மௌனமாக பார்த்தால்

சுடு சொலொன்று கல்லென எறிந்த பின் இதழ்குளம் மௌனித்துவிடுகிறது

மனமாக பார்த்தால்

மிக முதர்ச்சி கொண்டமனம் அல்லது ஞானியின் மனம் எந்த ஒரு சலனத்தையும் கொள்வதில்லை எந்த ஒரு கல்லாலும்

கல் புத்தன் மீதோ/கடவுள் மீதோ எறியப்பட்டதாக கொண்டால், அவர்கள் எந்த ஒரு சலனத்தை காட்டப்போவதில்லை

கல் ஒரு மதக்கலவரம் என கொண்டால், கடவுளாகிய குளம் எந்த சலனமும் காட்டுவதில்லை

கல் ஒரு விபத்தெனவோ அல்லது பிறப்பெனவோ அல்லது ஒரு இறப்பெனவோ கொண்டால் குளம் பூமியாக சலனமின்றி சுற்றிக் கொண்டே இருக்கிறது

கல் ஒரு யாசிக்கும் குரலென அல்லது ஒரு மரணக்குரல் எழுப்பும் அல்லது ஜீவித்தலிக்கு போராட்டம் போரென கொண்டால் இரக்கமற்ற மனமொன்று சலனமின்றி யிருக்கும் குளமாகிறது

கல் ஒரு புரியாத படைப்பென கொண்டால் அதனை திறக்க தெரியாத வாசகன சலனமின்றி குளம் போலிருக்கிறான்

உச்சப்பட்சமான சலனத்தில் இருக்கும் ஒரு குளத்தில் எறியப்படும் கல் அதில் எந்த சலனத்தையும் உண்டுப்பண்ணுவதில்லை

மூடப்பட்ட ஒரு குளத்தில் எறியப்படும் கல்லும் சலனத்தை தோற்றுவிப்பதில்லை

கல் ஒரு குளத்தில் சலனமற்ற குளம் வேறு இடத்தில்

கல் பொய் சலமின்றி யிருக்கும் குளம் மெய்

பாராபர வெளி குளம் அதில் எறியப்பட்ட கல் புரிதல்/அறிதல்/தெளிதல்/தொடுகை

குளம் வானம் கல் சூரியன் அல்லது சந்திரன்

குளம் வெளி கல் பறவை

இப்படி சிந்தனை விரிந்து கொண்டே போகுது

எப்பேர்ப்பட்ட கல் விழுதாலும் புத்தன் மட்டும் சலனமில்லாமல்

தொடரும்..
அன்புடன் ஆதி