Author Topic: பார்த்தாலே நோய்களை தீர்க்கும் மரகத லிங்கம்  (Read 1246 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பார்த்தாலே நோய்களை தீர்க்கும் மரகத லிங்கம்

தஞ்சை மாவட்டம் திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள மரகத லிங்கம்...இதன் மதிப்பு பல கோடி!...அந்தளவு இந்த மரகதம் அபூர்வமான ஒளியை பிரதிபலிக்ககூடியது..இதன் ஒளி நோய்களை குணமாக்ககூடியது..நம் கண்களின் ஒளி..இதன் ஒளியை கிரகித்து நம் உடலில் நரம்பு மண்டலத்தை புத்துணர்வாக்குகிறது..நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது..

மூளைத்திறனை அதிகரிக்க செய்கிறது..மூச்சு ஓட்டத்தை சீராக்குகிறது..உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது...தீராத நோயையும் தீர்த்து வைக்கிறது..இந்த லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து அந்த தீர்த்ததை மருந்து போல உண்ணலாம்...செல்வ கடாட்சத்தையும் நினைத்ததை நிறைவேற்றி தரும்....நம் மனதில் என்ன எண்ணத்தில் வழிபடுகிறோமே அதை பிரபஞ்சத்தில் நொடிப்பொழுதில்கலக்க செய்து,அந்த காரியம் நமக்கு சாதகமாக முடிய செய்வதில் இக்கல் சக்தி வாய்ந்தது..

உயிரோட்டம் நிறைந்தது...கர்ப்ப கிரகத்தில் ஒவ்வொரு புகழ்பெற்ற ஸ்தலத்தில் இருக்கும் கடவுள் சிலைகளும் வெறும் கருங்கல் அல்ல..பேசும் உயிரோட்டம் நிறைந்த கற்களாகும்..அவர்றை உற்று நோக்கி நம் வேண்டுதலை வைத்தால் நிச்சயம் அவை நிறைவேறும்..எனக்கு ஒரு கோடி வேணும் என்று கேட்டா கொடுக்குமா?..என கேட்டால் கொடுக்காது..மனம் உருகி நீங்கள் ரொம்ப நாட்களாக மனதில் ஆழத்தில் இருக்கும் குறைகளை சொல்லி வேண்டினால் அவை நிச்சயம் கைகூடும்..உதாரணம் திருமணம்,தொழில்,கடன் தொல்லை போன்றவை.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்