சந்திரன்:
கிரக வரிசையில் இருந்தாலும், சந்திரனை 2 -ம எண்ணுக்கு உரியவராக உள்ளார். அம்மனிற்கு உகந்த ஒன்ப்றாக கருதப்படுகிறது. நீர் கிரகமாக கருதப்படுவதால், நீர் சம்பந்தப்பட்ட சளி, இருமல், உடல் ஊதல், பெருந் தொப்பை
போன்ற நோய்கள் ஏற்ப்பட இக் கிரக சக்தி குறைபாடே. அம்மனுக்கு 2 விளக்கு ஏற்றப்படுவதும் சந்திர தோஷத்தை நீக்கும் பொருட்டே. தாய், வயதான பெண்மணிகள், பெண் குழந்தைக்கு செய்யும் தீங்குகள், தெரிந்தே செய்யும் மன்னிக்க முடியாத குற்றங்கள் (அம்மன்) தெய்வ நிந்தனை, இவைகளே சந்திர தோஷம் ஏற்ப்பட காரணிகளாக அமைகின்றது. முழு நிலவு நாளில் , பெரும்பாலான அம்மன், ( காளி ) கோயில்களில் பௌர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.