Author Topic: மரணம் வென்றவர் யாருமில்லை  (Read 914 times)

Offline thamilan

மரணம் வென்றவர் யாருமில்லை
மரணத்தை கண்டு அஞ்சாதவர் எவருமில்லை

மரணம் ஒரு ஓய்வு
நல்லவன் இறந்தால் அது
அவனுக்கு கிடைக்கும் ஓய்வாகுகிறது
கெட்டவன் இறந்தால் அது
மற்றவருக்கு கிடைக்கும் ஓய்வாகுகிறது

பயணி தன் பயணமுடிவிடம் கண்டு
அஞ்சுவானா
பயணத்தின் முடிவில்
பயணிக்குக் கிடைக்கும் ஓய்வு
சுகமானது

நம் வாழ்க்கைப் பயணமும்
மரணத்தில் முடிகிறது
உதித்தது முதல்
எங்கெங்கோ அலைந்து திரியும் நதி
கடலை அடைந்ததும்
ஓய்வு பெறுவது போல
பிறந்தது முதல்
துன்பங்களை அனுபவிக்கும் மனிதன்
மரணத்தில் ஓய்வு பெறுகிறான்

பலருக்கு மரணமே
துன்பங்களில் இருந்து விடுதலை
அளிக்கிறது
மரணம் துன்பங்களில் மட்டுமல்ல
பாவங்களில் இருந்தும்
விடுதலை அளிக்கிறது

வாழ்க்கை பாதை முழுவதும்
சாத்தான் வலை விரித்து
காத்துக் கொண்டிருக்கிறான்
வாழ்க்கை என்பதே
பாவம் செய்வதற்கான
வாய்ப்பு தானே

நல்லவர்கள் சீக்கிரம்
இறந்து போகிறார்கள்
நல்லவர்கள் பாவத்தில் விழாமல் இருக்க
மரணம் அவர்களுக்கு
உதவுகிறது

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
arumaya eruku nanba thodarnthu eluthungal vaalthukal
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline supernatural

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1444
  • Total likes: 9
  • Karma: +0/-0
  • உலகில் அரிதானது அன்பே...
எங்கெங்கோ அலைந்து திரியும் நதி
கடலை அடைந்ததும்
ஓய்வு பெறுவது போல
பிறந்தது முதல்
துன்பங்களை அனுபவிக்கும் மனிதன்
மரணத்தில் ஓய்வு பெறுகிறான்

பலருக்கு மரணமே
துன்பங்களில் இருந்து விடுதலை
அளிக்கிறது
மரணம் துன்பங்களில் மட்டுமல்ல
பாவங்களில் இருந்தும்
விடுதலை அளிக்கிறது


உண்மையான வரிகள் ...
நல்ல கவிதை...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 602
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Quote
நல்லவர்கள் சீக்கிரம்
இறந்து போகிறார்கள்
நல்லவர்கள் பாவத்தில் விழாமல் இருக்க
மரணம் அவர்களுக்கு
உதவுகிறது


arumayana varikal thamilan