Author Topic: மனிதர்களும், மூடநம்பிக்கையும்!  (Read 997 times)

Offline Yousuf

கால காலமாக வேரூன்றி இருக்கும் ஒரு நச்சு விதைதான் மூட நம்பிக்கைகள். மூட நம்பிக்கைகளைக் கைக்கொண்டு மனிதர்கள் ஒரு ஆட்டோ சஜசன் என்று சொல்லக்கூடிய ஒரு தானியங்கி கருத்கு பதிவினை காலம் காலமாக மனதில் தேக்கிவைத்து அதன் படி செய்தால்தான் தங்களின் மனது நிறைவுறும் என்று ஒரு சைக்கோத்தனமான செய்கைகளை முன்னிலைப்படுத்தி செயப்பட்டும் வருகின்றனர்.

பரீட்சையில் பாஸ் பண்ன வேண்டுமானல் மனோதைரியமும் கடின உழைப்பும், விடா முயற்சியும் பாடங்களை நினைவில் இருந்த அமைதியான சூழ் நிலையும் தான் தேவை என்று அழுத்தமாக போதிக்காததால் ஏராளமான தேங்காய்கள் தெருவோரம் உடைக்கப்படுகின்றன.

பிறந்த குழந்தைக்கு மூடநம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் தமிழ்நாடு என்றால் நம்ப போறிங்களா என்ன!?, கேட்டு பாருங்கள் வீட்டில் குழந்தைக்கு சேனை வைப்பது என்றால் என்னான்னு, பிறந்த குழந்தைக்கு பெருசுகள் கூடி சர்க்கரை தண்ணீர் கொடுப்பது தான் சேனை வைப்பது என்பார்கள், டாக்டர்கள் கொடுக்கக்கூடாது என்றாலும் கேட்பதில்லை, குழந்தை அழும்போது நர்ஸ் வந்து கவுத்திபோட்டு முதுகில் நாலு தட்டு தட்டிவிட்டு போவார்கள்!, சரி சேனை ஏன் கொடுக்குறாங்க தெரியுமா?, சேனை வைப்பவர்களின் குணம் குழந்தைக்கும் வருமாம்! டி.என்.ஏ, குரோம்சோம்கள் எல்லாம் தூக்கி போட்டு அறிவியலை அட்டாரியில் அடகு வைத்து ஆண்டாண்டு காலமாய் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் பெருமைகுறிய சமூகம் நமது சமூகம் தான்!


சரிப்பா, அறிவியல் உனக்கு தெரியும், எனக்கு தெரியும். வயசானவங்களுக்கு எப்படி தெரியும், அதெல்லாம் காலம் காலமா செஞ்சுகிட்டு இருக்குறது தானே என்பவர்களுக்கு மூடநம்பிக்கையின் வளர்ச்சி பற்றி ஒரு குட்டிகதை சொல்றேன்!


பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு செய்தது, குரு சீடர்களிடன் அந்த பூனையை பிடித்து ஒரு தூணில் கட்டச்சொன்னார், பாடம் முடிந்ததும் பூனை அவிழ்த்து விடபட்டது, மறுநாள் பாடம் ஆரம்பிக்கையில் மீண்டும் அதே பூனை தொந்தரவிற்கு வந்தது, இம்முறை குருவின் பார்வையே போதுமானதாக இருந்தது பூனை மீண்டும் தூணுக்கு போக, அதற்கு மறுநாள் பாடம் ஆரம்பிக்கும் முன்னரே பூனை தூணில் கட்டபட்டது, சரி பூனை தொந்தரவு செய்தது தூணில் கட்டினார்கள், இதிலென்ன மூடநம்பிக்கை என்கிறீர்களா!? அங்கே தான் இருக்கு கதையே, ஒருநாள் அந்த பூனை செந்துவிட்டது, விடுவார்களா சீடர்கள், ஒருபூனையை தேடி பிடித்து வந்து தூணில் கட்டினார்கள்!


ஏன் செய்யுறோம், எதுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வும் இல்லாமால், காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பது தான் மூடநம்பிக்கை என்று அழைக்கபடுகிறது, உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது, மேலை நாடுகளில் இருக்கும் பயமுறுத்தும் எண்களை விட மூணாம் நம்பர் அனைவரிடத்திலும் எதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தியது, எதாவது ஒரு வகையில் செயலை மூன்று தடவை செய்வார்கள், அதற்கு உளவியலில் ஒரு பெயர் கூட இருக்கிறது, கிட்டதட்ட மூடநம்பிக்கை ஜீன்களோடு கலந்துவிட்டது என ஒரு உளவியல் மருத்துவர் என்னிடம் சொல்லி வருத்தபட்ட காரணம் இது!

”கேள் என்பது மந்திரம்” என ஒரு அறிவியல் அறிஞர் சொல்லியிருக்கிறார்!, கேள்வி கேள் என்பது அறிவு கதவை திறக்கு சாவி என்பதை தான் சுருக்க சொல்லியிருக்கிறார்!, எல்லாரும் செய்யுறாங்க, அதனல நானும் கேள்வி கேட்க செய்யுறேன் என்று சொல்வது மனிதனின் வேலை இல்லை, இயந்திரத்தின் வேலை. ஒரு மனிதனாக நமது செயலின் விளைவுகளையும்,தன்மையும் அறிவது நமது கடமை. வெறுமனே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் கேள்விகளுக்கு ஆதாரம் கேட்கக்கூட தயங்கக்கூடாது!, இது வரை இருந்த மூட நம்பிக்கைகளை நம் தலைமுறையோடு குழி தோண்டி புதைப்போம்!