பலரும் பல விதங்களில் உள்ளே வந்து,
பலவற்றையும் எழுதிவிட்டு,
எதுவும் சொல்லாமலே சென்றுவிடுகிறார்கள்
எந்தவிதமான பிணைப்பும் இல்லாமல்
ஒருவேளை என்னை ஒரு குறிப்பேடு போல
எண்ணியதாலோ என்னவோ
இதை படிக்கையில் அனைவரிடமும்
எஞ்சியிருந்த சில கேள்விகள்
கடைசிப் பத்திக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும்,
முதல் பத்தி போலவே அதுவும்
முதலிலேயே வாசிக்கப்படலாம்
ஆனால்
வாழ்வில்
வகுத்தல், பெருக்கல் மற்றும்
கூட்டல் போன்ற கணக்குகளுக்குச் சரியான
விடையளிக்காமல், அவற்றிற்குக் கீழே
குறியீடுகளை இடுவதற்கு முன்பே
அவர்கள் என் மீது கற்களை வீசத் தொடங்கியிருப்பார்கள்
அறியப்படாத ஒரு திரையின்
இருபுறமும் நாம் இருக்கலாம்,
நினைவுகளை அசைபோட்டபடி
நமது தவறுகளுடன் நாம் ஓடிச் சென்றிருந்தாலும்,
நமக்காகக் காத்திருக்கும் புன்னகைகளை
நாம் காணாதது போல் நடிக்கிறோமோ என்னவோ
நீங்கள் சொல்லி முடிக்காத
மீதமுள்ள வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கலாம்
மறக்க முடியாத விஷயங்களுடன்
பெரும்வெள்ளமெனத் திரும்பி வரும் நினைவுகள் கூடப்
பொய்களைச் சொல்லக்கூடும்.
ஒரு சொல்லின் கூர்மையான விளிம்பால்
சிதறிய இரத்தத்தின் வாசனையை
நுகர்ந்தபடி நான் வாசித்துக் கொண்டிருக்கையில்,
கையில் ஏதுமற்ற அந்தப் புத்தகங்கள்
என்னை ஏறிட்டுப் பார்த்து
ஏளனம் செய்துகொண்டிருக்கக்கூடும்
நான் ஓட முற்படும்போதெல்லாம்
என் பின்னால் ஆயிரம் அலறல் சத்தங்கள்
இருந்தும் வாழ்க்கை
நூலகத்தில் காத்திருக்கும்
வருகைப்பதிவேட்டை போல
காத்திருக்கும்
இன்னும் பலர் வருகைக்காக
***Joker***