Author Topic: குதிரை லாட ரகசியம்:  (Read 2 times)

Offline MysteRy


ஒரு வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்களுக்கு நாம் நிறைய பெயரை வைத்திருக்கின்றோம். கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, மருந்து வைப்பது இப்படி எதிர்மறை ஆற்றலுக்கு பல உருவங்களை கொடுக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத இந்த கெட்ட சக்திகளிடம் இருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலபமான பரிகாரம் தான் நிலை வாசலில் குதிரை லாடத்தை வைப்பது...

மேற்கத்திய நாடுகளில் தேய்ந்து போன பழைய குதிரை லாடம் அதிர்ஷ்டமும், தீய ஆவிகளை விரட்டியடிக்கும் தாயத்து போன்று வல்லமை பொருந்தியது என்ற நம்பிக்கையால், குதிரை லாடத்தை வீட்டின் முன்புற வாயிற் கதவில் பொருத்திவிடும் வழக்கம் உள்ளது.

சனிக்கிழமையில் குதிரைலாடத்தை ஒரு கருப்பு துணியில் சுற்றி அதனை நீங்கள் பணம் வைக்கும் லாக்கரில் வைத்தால். இது உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்..

வாஸ்துவின் படி வீட்டின் முன்கதவில் இதனை மாட்டி வைப்பது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தி கண் திருஷ்டியையும் போக்குகிறது...

ஆற்றலூட்டப்பட்ட அதிர்ஷ்ட குதிரைலாடத்தை உங்கள் வீட்டின் முன்கதவில் U வடிவில் தொங்கவிட வேண்டும்.. இது செல்வத்தை ஈர்க்க நூற்றாண்டுகளை கடந்தும் செய்யப்படும் வழிமுறையாகும்...

அசைவம் சமைத்து வெளியிடங்களுக்கு எடுத்து செல்லும்போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும், பேய் பிசாசு பிடித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கூட ஒரு சிறிய ஆணியை அந்த அசைவ சாப்பாடு உடன் வைத்து அனுப்புவார்கள். சாதாரண இரும்பை விட பல மடங்கு சக்தி கொண்டது தான், இந்த இரும்பில் செய்யப்பட்ட, குதிரை காலில் இருக்கக்கூடிய லாடம்.

குதிரை லாடங்களை நீங்கள் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்கவும். ஒரு சில இடங்களில் நோய் வாய்ப்பட்ட‌ அல்லது விபத்துகளில் இறந்த குதிரைகளின் லாடம் விற்கப்படுகின்றது. அதனை பெற்றால் முழு பலன் தராது..

ஓடும் குதிரை என்பது வலிமை வேகம் ஆகியவற்றை குறிப்பதால் தொழில் வாழ்க்கையில் வெற்றி பதவி உயர்வு போன்றவற்றை விரும்புபவர்கள் ஓடும் குதிரையினுடைய படத்தை வீட்டில் வடக்கு திசை நோக்கி வைத்திருப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.

முறையாக சாஸ்த்திரப்படி தோஷ நிவர்த்தி செய்யப்பட்டு மந்திர உருவேற்றம் செய்து இந்த குதிரை லாடங்களை பயன்படுத்தும் போது மாபெரும் மாற்றங்களை காணலாம்...