Author Topic: சளி, இருமலைத் துரத்தும் மிளகு...  (Read 372 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226625
  • Total likes: 29010
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது!

நம் வீடுகளில் ரசம் வைக்கும்போதும், குழம்பு வைக்கும்போதும் மிளகு சேர்ப்போம். ஆனால் அது உணவு மட்டுமல்ல, பல்வேறு பிணிகளுக்கான மருந்தும்கூட! இதோ சில...

* சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.

* மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி தலா 50 மில்லி அளவு எடுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், கோழைக்கட்டு போன்ற கப நோய்கள் சீக்கிரம் சரியாகிவிடும்.

* சளி தொந்தரவுகளின்போது மிளகு ரசம் கைகொடுக்கும். மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை கலந்த கலவையில் எல்லோருமே ரசம் வைப்போம். இந்த ரசத்தை சளி நேரத்தில் சூடாக அருந்துவதால் சுவாசம் எளிதாவதோடு, நெஞ்சுச்சளியை அறுத்துவிடும். கடைகளில் சூப் குடிக்கும்போது மேலாக மிளகுத்தூள் தூவுவார்கள். அப்படிச் செய்வதும் இதம் தரும்.

* வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

* ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.

* தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.

* பொதுவாக மிளகு கசாயம் சளி, காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும். எப்பேர்ப்பட்ட காய்ச்சல் வந்தாலும் 10, 15 மிளகை எடுத்து வெறுமனே சட்டியில் போட்டு அது கருகும் அளவு வறுத்து, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாதியாக வற்றும்வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்தக் கசாயத்தை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை குடித்து வந்தால் எந்த விதமான காய்ச்சலும் பறந்துவிடும். ஒருமுறை வறுத்த மிளகை மீண்டும் ஒருமுறை தண்ணீர் விட்டு கசாயமாக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்றாவது முறை கசாயம் செய்ய மீண்டும் மிளகை வறுத்து தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். இப்படி மாற்றி மாற்றி செய்து வந்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். இதே கசாயம் தொண்டைவலி, தொண்டை கமறல் போன்றவற்றையும் சரி செய்யும்.