Author Topic: மூட்டு வலி.......  (Read 28 times)

Online MysteRy

மூட்டு வலி.......
« on: July 01, 2025, 08:20:41 AM »
பேரிச்சம் பழங்களையும் தேங்காயும் காலை உணவாகத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவிதமான எலும்பு வலிகளையும் குறைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள்கூட தேங்காயுடன் பேரிச்சம்பழங்களைக் கலந்து உண்டு வந்தால் விரைவில் குணமடையும்.

கால் மூட்டு வலி பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைகள் மற்றும் வீட்டிலிருப்போர் மிச்சம் வைக்கும் உணவையும், சிறிதளவுள்ள உணவைக் கூட தூக்கி எறிய மனமின்றி வயிற்றுக்குள் போட்டு வயிற்றை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தி அவர்களின் வயிற்றுக்கு கேடு விளைவிக்கின்றனர்.

எனவே தாய்மார்கள் மீதமான உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக உணவு உண்ணக் கூடாது. இயற்கை உணவுக்கு மாற வேண்டும்.