நான் யாரென்றே
எனை நான் கேட்க
விடையதை அறிய
எனக்குள் வேட்கை
தொடங்கிடத் தானே
துடிப்புடன் இங்கே
முயல்கிறேன் நானே
முடிவது எங்கே?
அடுத்தவர் மனதை
காயம் செய்யா
கருத்துக்கள் பேசும்
மாயக்காரன்
படித்தவர் சொல்லும்
வார்த்தை கேட்டு
பண்பை வளர்த்த
நியாயக் காரன்
நற்குணம் நெஞ்சில்
வளர்க்கத்த்தனே
நல்லோர் கூட்டம்
தேடுகின்றேன்
தீக்குணம் கொண்டு
நெருங்குவோரை
தீண்டிடா வண்ணம்
ஓடுகின்றேன்
பால்மனம் மாறா
குழந்தைபோல
வஞ்சம் சூழ்ச்சி
தடுத்து நின்றேன்
பலமனம் என்னை
கண்டு மகிழ
முகத்தினில் புன்னகை
உடுத்தி நின்றேன்
மனம் சொல்லும் வார்த்தை
மதித்தே நான் நடப்பேன்
பணம் சொல்லும் பாதை
ஒரு போதும் நடவேன்
பணிவென்னும் வகையில்
சிரம் தாழ்ந்து நடப்பேன்
புகழுக்கு மயங்கி
தரம் தாழ்ந்து நடவேன்
எந்தன் செயலால்
பகையேதுமில்லை
நான் என்றும் நானே
நிகரேதுமில்லை..