Author Topic: பெண்ணின் கண்ணீர் !  (Read 431 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1073
  • Total likes: 3610
  • Total likes: 3610
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
பெண்ணின் கண்ணீர் !
« on: March 30, 2025, 05:33:55 PM »
உனக்கு
அழத் தெரியாதா?
நீ அழுது
நான் பார்த்ததில்லையே ?!
என கேட்ட
அவனது கேள்விக்கு
சிறு புன்னகையை மட்டும்
பதிலாய் கொடுத்து
அமைதியாக இருந்தாள்

உங்களுக்கு ஒன்று தெரியுமா
என அவர் தொடர

பெரும்பாலான ஆண்கள்
அழும் பெண்களை விரும்புகிறார்கள்,
ஏன் சமூகம் கூட
அவர்களை அதிகம் விரும்புகிறது

அது ஏன் அப்படி ?
என அவள் வினவ

அழும் பெண்ணின்
பலவீனமான இதயத்தில்
அனுதாபம் மற்றும் பாதுகாப்பின் பெயரில்
ஊடுருவுவது எளிது
அப்படி அல்லாதவர்களை
திமிர் பிடித்தவள் என
அழைக்க தான் எல்லாருக்கும் விருப்பம்

மெல்லிய புன்னகையுடன்
அவள் சொன்னாள்
நான் அழுவதில்லை என்று யார் சொன்னது?

என் கண்ணீரைக் காண
வெறும் கண்கள் போதாது..
அன்பு நிறைந்த இதயம் வேண்டும்
மனிதம் சாகாத மனம் வேண்டும்

அழுவதும்
காதலும்
ஒன்றுதான்
எல்லோர் முன்னிலையிலும்
வெளிப்படுத்திக்கொண்டிருக்க இயலாது

வானில்
கார்மேகம் போல தேக்கி வைத்தவை
மிகவும் பிரியமான இடங்களில்.
நம்மை இணைத்து வைத்திருப்பவர்கள்
முன் மட்டுமே மழை பெய்வது போல
வெளிப்படும் என்று

சிரித்த அவள்
முகத்தில்
முழுமதியின்
வெளிச்சம் காண

கண்களில்
திரண்டு வரும் கண்ணீரை
சீக்கிரம் துடைக்க நினைத்தான்

இல்லையேல்
விழும் கண்ணீர் துளிகள்
நெஞ்சை சுட்டெரித்து விடுமோ
என்று பயந்தான்.

உணர்ந்தான்
பெண்கள் என்றும்
பலவீனமானவர்கள்
அல்ல


****JOKER****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

Re: பெண்ணின் கண்ணீர் !
« Reply #1 on: March 31, 2025, 05:54:47 AM »
பெண்களின்  அழுகையில்  உள்ள ஆயிரம்  அர்த்தங்களை  புரிந்துகொள்ள
அபார சக்தி  வேண்டும்  ஆண்களுக்கு.     அருமையான கவிதை  .

Offline Ishaa

Re: பெண்ணின் கண்ணீர் !
« Reply #2 on: April 05, 2025, 05:28:12 AM »
என் கண்ணீரைக் காண
வெறும் கண்கள் போதாது..
அன்பு நிறைந்த இதயம் வேண்டும்
மனிதம் சாகாத மனம் வேண்டும்
-

Thanimaiyae thunaiyai konde silarukku
Kaneerai thudaikka
verum panchil seitha
thalaiyanai yae pothum.


-----------------------------------------------------

அழுவதும்
காதலும்
ஒன்றுதான்
எல்லோர் முன்னிலையிலும்
வெளிப்படுத்திக்கொண்டிருக்க இயலாது

வானில்
கார்மேகம் போல தேக்கி வைத்தவை
மிகவும் பிரியமான இடங்களில்.
நம்மை இணைத்து வைத்திருப்பவர்கள்
முன் மட்டுமே மழை பெய்வது போல
வெளிப்படும் என்று -


10 masam vayirthil
vazhkai pura nenjil sumakkum
Priyamana amma munnil kooda
kanneer maraithathey athigam.
en sogathai aval ariyamal irukonumey enre oru karanathal.


-----------------------------------------------------

Avalin Vazhkai Thedale avalin kaneerai mathikum/ thudaikkum jeevanukkey.

-----------------------------------------------------

Romba azhagana, azhamana, enakku migavum piditha kavithai Joker!
Neenga post pannuna naalil irunthu ennodaya mind la odi kithe irunthuchu.
Paadu kku esai paadu pole unga kavithai inthe Esai points sollanum enru thonichu.