« on: March 08, 2025, 04:17:58 PM »
2020யில் எழுதப்பட்ட கட்டுரை இது.
இந்த கட்டுரை எழுத தூண்டிய நிஞ்ஜாவிற்கு நன்றி.
மகளிர் தினத்திற்காக இங்கு பதிவு செய்கிறேன்
பெண்ணியமும் சுயமரியாதையும் ...!
"பாரதி கண்ட
புதுமை பெண்கள் வேண்டாம்
இன்று நமக்கு
பெரியார் சொன்னது போல
புதுமை படைக்கும்
பெண்களே வேண்டும்!"
பெண்ணியம் என்றால் என்ன ?
என் பார்வையில் பெண்ணியம் என்றால் பெண்களை ஆண்களுக்கு சமமாய் பார்ப்பது மட்டும் இல்ல அதையும் கடந்து யோசிக்க வைப்பதே பெண்ணியம்.ஒரு பெண்ணை தேவதையாகவோ கடவுளாகவோ வர்ணிக்க வேண்டாம். பெண்ணை பெண்ணாக மதித்து சமஉரிமையும் சுயமரியாதையோடு நடத்தினால் போதும், அதுவே அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வழி வகுக்கும்.

இந்த கட்டுரைக்கு மிக முக்கிய காரணம் நமது FTC பண்பலையில் இசைத்தென்றல் நிகழ்ச்சிக்காக நிஞ்ஜாவின் பதிவே காரணம். அந்த பதிவு என்னவெனில் "பையனுக்கு love failureனா அடிடா அவள உதடா அவள இப்படினு பாட்டு போடுறாங்க.அதுவே பொண்ணுக்கு love failureனா பீல் பண்ணிட்டு இருப்பாங்க...”. இந்த ரெண்டு வரிகள் என்னை யோசிக்க வைத்திருக்கிறது. என் மனதிற்குள் எழுந்த கேள்விகளும் அதற்கான பதில்களுமே இந்த கட்டுரை .
நிஞ்ஜா சொல்வதும் உண்மை தானே,
ஏன் இந்த அடக்குமுறை ?
எதுக்கு இந்த வன்முறை ?
ஏன் இந்த ஏற்ற தாழ்வு ?
அவர்களும் நம்மை போல ரத்தமும் சதையும் இருக்குற மனுசங்க தானே ஏன் இந்த அணுகுமுறை ? இதுக்கான ஆரம்ப புள்ளி எங்க எங்கன்னு தேடும் போது "கற்பு" இந்த இடத்துல போயி நிக்குது. ஏன் இந்த விசயம் கற்புல போயி நிக்குதுன்னா கற்பு பொம்பள பிள்ளைகளுக்கு மட்டும் உரியதுன்னு define பண்றங்க ஆனா ஆம்பள பசங்களுக்கு அதை ஒரு விஷயமா கருதுறது இல்ல. இந்த ஒரு சின்ன வட்டத்துல சிக்க வச்சி, ஒரு பொண்ணுன்னா இப்படித்த இருக்கனும் பூ வைக்கனும், பொட்டு வைக்கனும், இப்படித்தான் உடை உடுத்தனும், ஆம்பள பசங்க கூட பழக கூடாது அப்படி இப்படினு ஆயிரத்து எட்டு restrictions. இதுல என்ன ஆச்சரியம்னா பொண்ணுங்களும் இப்படி இருந்ததா தான் நாம ஒரு பொண்ணுனு அவங்களே fix பண்ணிக்குறாங்க இந்த வட்டத்தை விட்டு வெளிய வர பொண்ணுங்க ரொம்ப கம்மி. அப்படியே வெளிய வந்தாலும் அந்த பொண்ணுங்கள இழிவு படுத்துற கூட்டம் இங்க நிறையவே இருக்கு.
இது எல்லாம் தாண்டி வரனும்னா பொண்ணுங்களே அதை உணரனும், நம்மள அடக்குறாங்க, ஒரு கண்ணாடி ஜாடிக்குள்ள வெச்சி மூட பாக்குறாங்கனு அவங்களே அவங்களோட தாழ்வு மனப்பான்மையை உடைக்கும் அந்த வட்டத்தை விட்டு வெளிய வரனும். சுயமா சிந்தித்து, சுயமா செயல்படனும். அவர்களுக்கான சுதந்திரம் உரிமையை வாங்கனும். அப்போ தான் இது எல்லாமே மாறும். இப்போ எல்லாம், பெண்ணியத்தை ஆண்கள்கிட்ட பேசுறத விட பெண்கள்கிட்ட தான் அதிகமா பேசனும் அப்படினு ஒரு நிலைமைக்கு நம்மள தள்ளிட்டு வந்துட்டாங்க. இன்னும் ரொம்ப simpleஆ சொல்லனும்னா ஒரு பையன் ஒரு பொண்ண ஏமாத்திட்டா அந்த பொண்ணு குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பயந்துட்டு வெளிய சொல்லாம இருக்காங்க. இது மாறனும் ஏமாத்தினவன சரிதான் போடா ஏமாத்துன நீயே சந்தோசமா இருக்கிற, அப்போ நா எதுக்கு பீல் பண்ணனும் அப்படிங்கிற மனப்பக்குவம் வரனும். தைரியமா அவன் என்னை ஏமாத்திட்டான்னு வெளிய சொல்லனும். அப்ப தான் அடுத்த ஒரு பொண்ணுக்கு இந்த கொடுமை நடக்காது ..பொள்ளாச்சி பிரச்சனை மாதிரியான விசயங்களை தடுக்கலாம்.
இதுக்கான காரணகாரியங்கள் என்னனு இன்னும் ஆழமா யோசிச்சி போகும் போது ஒரு விசயம் தெளிவா மனசுல பட்டுச்சு, எப்போ ஒரு ஆண் ஒரு பெண்ணை தன்னைவிட ஒரு தாழ்ந்த பாலினமா பாக்க ஆரம்பிக்கிறான் ? எப்போ அந்த ஒரு விசயம் ஆண்கள் மனசுல ஆழமா பதியுது ? இந்த மாதிரியான கேள்வி என் மனசுல வந்துச்சு இந்த ரெண்டு கேள்விக்குமே என்கிட்ட இருந்த பதில் குடும்பம். ஒரு மனிதனின் முதல் சமூக கட்டமைப்பு குடும்பம் தான். ஒரு குடும்பத்துல அவன் எப்படி வளருரானோ அதோட எதிரொலிதான் அவன் பொதுவெளி சமூகத்துல பிரதிபலிக்கிறான்.
அதனால நம்ப வீட்டுல இருக்குற பசங்களுக்கும் சொல்லி கொடுத்து வளர்க்கனும் ஆணும் பெண்ணும் சமமென்று. ஆணை அடிச்சாலும் வலிக்கும், பெண்ண அடிச்சாலும் வலிக்கும், ஆணுக்கும் ரத்தத்தின் நிறம் சிவப்புதான் ,பெண்ணுக்கும் அதே ரத்தம் தான். ஆணை ஒரு பெண் மதிப்பது போல பெண்ணையும் ஒரு ஆண் மதிக்க வேண்டும்..ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையும் சரிக்கு சரி நிகரானவர்கள் என்றும் ஒரு குடும்பம் நம்பி வளர்த்தால் மட்டுமே பொது சமூகத்திற்கு செல்லும் போது அதை செயல்படுத்த முடியும்.
பெரியார், அம்பேத்கர், கலைஞர் இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்கள் பெண்களுக்காக அவங்களோட உரிமைக்காக சுதந்திரத்துக்காக சமூகநீதிக்காக சட்டத்தை கொண்டுவந்த பிறகுகூட ஏன் இன்னும் நம்ப பெண்ணியம் பேசிட்டே இருக்கோம். அதுக்கு மிக முக்கிய காரணம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை. இந்த சமூகத்துல எப்பவுமே மனரீதியாவும் உடல்ரீதியாவும் அதிகமா பாதிப்பும் துன்பமும் ஏற்படுறது பெண்களுக்கே! காதலில் தேவதையாக வர்ணிக்கப்படும் பெண்களே காதல் தோல்விக்கு பிறகு வேசியாக தூய்மையற்றவளாக சித்தரிக்கப்படுகிறாள். உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களிடமே சாட்சி கேட்கும் உலகம் இது.
பெண்களுக்கு அடக்கம் தேவை, அணியும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு தேவை, ஆண்களிடம் பேச எல்லை வரம்பு தேவை, இது போன்ற அறிவுரைகளை பெண்களுக்கு மட்டும் கற்று தராமல் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கும் கற்று தரவேண்டும். சுதந்திரம் என்பது தருவது அல்ல எடுத்துக்கொள்வது.
பெண்ணே
உன் மனதில்
எழும் கேள்விகளுக்கு
நீயே விடை
தடைகளை உடைத்து
எழுந்து வா...!
வருவது மட்டும் போதாது சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து வர வேண்டும்...!
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
-சாக்ரடீஸ்.
« Last Edit: March 08, 2025, 04:22:21 PM by சாக்ரடீஸ் »

Logged