நெருஞ்சியால் நெருக்கப்பட்ட இருவாட்சியே
உனது இருளுக்கு ஒளியானேன் - அதில்
சிறிது நானும் ஒளிப்பெற்றேன்.
வழிப்போக்கனின் பெருங்காயத்தி்ற்கு
சிறு மருந்தாக மாறினேன்
சிறு துணையாக மாற்றினேன்.
ஒளிப்பெற்று ஒளியானவனே!
துணையாக துணிவில்லை
கருமேகமாய் பின்தொடர்வேன்!
கார்மேகம் கரைந்து மழையானால்
என்செய்வேன்! துளிகளைச் சேகரித்து
புதையலாய் என்னுள் புதைப்பேன்..
புதையுண்ட தருணத்திலும் சிறு -
புன்னகையுடன் பூக்களாய் இரு
பூரிப்புடன் எங்கோ நானிருப்பேன்.
எதிரே நீயில்லை என்றாலும்
புன்னகைப் பூத்த நினைவுகளாய்
கண்ணுக்குள் என்றும் நீயிருப்பாய்
கண்ணோட்டம் வேறாகினும்
வெளிக்கொணர்ந்த உணர்வுகள்
ஒளியே!
கார்மேகமே!
புதையலே!