தீமையை நன்மையால் வெல்ல வேண்டும். கருமியை ஈகையால் வெல்ல வேண்டும். பொய்யனை உண்மையால் வெல்ல வேண்டும். பகைவனை அன்பினால் வெல்ல வேண்டும். இவையே பண்புடையோரின் நெறிமுறையாகும்.
* பிறர் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுடைய குறைகளையே காணுபவர்கள், பிறரைப் பற்றி புறஞ்சொல்லும் குணமுடையவர்கள், இறுதியில் தங்களுடைய குறைகளை திருத்த முடியாமல் தவிப்பார்கள்.
* உண்மையில் ஆனந்தம் என்பது எது தெரியுமா? உங்களால் இயன்ற நல்ல செயல்களை செய்வதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தை இழக்க மாட்டீர்கள்.
* மனிதன் பழக்கத்திற்கு அடிமையானவன். ஒருமுறை செய்த செயலைத் திரும்ப திரும்பச் செய்யும் தன்மை கொண்டவன். ஆதலால், பாவம் தரும் செயல்களை செய்வதற்கு அஞ்சுங்கள். இல்லாவிட்டால், பழக்கத்தினால் மீண்டும் மீண்டும் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
* துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம் உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட முடியாது.