Author Topic: யாரோ நீ ..1  (Read 801 times)

Offline Mr.BeaN

யாரோ நீ ..1
« on: August 10, 2024, 03:47:01 PM »
எந்திரன் போலே
இருந்தவன் நானே
என்னை கவர்ந்த
தேவதையே

தந்திரம் இல்லா
பெண்மையை கொண்டே
என் மனமதையே
கவர்ந்து விட்டாய்

மந்திர கோளாய்
மங்கை உன் குரலும்
என் செவி புகுந்து
ஆட்டுவிக்க

இந்திர லோகம்
என் கண் முன்னே
இருப்பது போல
தோன்றிடுதே

கல்விக்கூடம்
சென்றே கற்ற
கலைகளை எல்லாம்
மறக்க வைத்தே

உந்தன் சொல்லை
உயர்வாய் என்னும்
ஓர் நிலைக்கே
தள்ளி விட்டாய்

எண்ணும் எழுத்தும்
ஏன் அறிந்தேன் என
இருந்தேன் இதுவரை
புரியாமல்

உன்னை கண்ட
பின்னர் உந்தன்
ரசனைக்கே என
உணர்ந்தேனே

என்ன விட்டு
சென்றால் கூட
ஒரு துளி நானும்
கலங்காமல்

எந்தன் எழுத்தால்
உன்னை எழுதி
என்றும் நானே
மகிழ்வேனே
intha post sutathu ila en manasai thottathu..... bean