Author Topic: அருமை மகனே(தாயின் குரல்)  (Read 565 times)

Offline Mr.BeaN


கட்டில் சுகம் கண்டு
கன்னியும் கழிந்த பின்னர்
தொட்டில் சொந்தமென்று
சொர்கமாய் எந்தன் கையில்
வந்தே அவதரிக்க
வலியதையும் மறந்த விட்டு
உள்ளங்கையில் ஏந்தி
அருந்தினேன் உன் அழகை

மாரில் பாலூட்டி
மடி மீதே தாலாட்டி
நேரம் காலமெதும்
நான் நோக்கி பார்க்காமல்
காலாய் உனக்கும் நான்
கை தூக்கி நடந்து கொண்டே
வேலாய் உன்னையுமே
நித்தமும் காத்தேனே

சற்றே வளர்ந்த பின்னே
சமுத்திரத்து முத்தெனவே
சிரிப்பை நீ உதிர்த்து
சிங்கார தமிழினிலே
உந்தன் மழலை மொழி
ஒரு பங்கும் மாறாமல்
அம்மா என்றழைக்க
அகமெல்லாம் குளிர்ந்ததடா

இன்னும் வளர்ந்துவிட்டே
எட்டு வைத்து நீ நடக்க
உந்தன் எதிர்காலம்
உன் கையில் தந்துவிட
நானும் பள்ளியிலே
கொண்டு உன்னை சேர்க்கையிலே
உள்ளமது வலிக்க
ஓங்கியே அழுதேனே


இன்றோ பதினைந்து
அகவையிலேயே இருக்கின்றாய்
எனினும் எனக்குமிங்கே
கை குழந்தை நீ என்றே
தோன்ற உன் கையை
இருக்கத்தான் பிடித்தபடி
செல்லும் என் வாழ்க்கை
முழுமைக்கும் செல்வேனே

கண்ணே கணியமுதே
எதற்கும் நீ அஞ்சாதே
தேனும் அமிர்தமுமே
உன்னையுமே மிஞ்சாதே
துன்பம் துயரமெல்லாம்
பறந்து விட பஞ்சாக
வாழ்வாய் வாழ்வாங்கு
நீயும் நந்நெஞ்சாக
intha post sutathu ila en manasai thottathu..... bean