Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 346  (Read 2631 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 346

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Sun FloweR

பயணங்களில் ரயில் பயணம் சுகமானது..
அதுவும் உன்னோடு இணைந்த ரயில் பயணம் இனிமையானது..
கூடவே வாசலில் உன்னுடன் தொங்கியபடி பயணிப்பது அலாதியானது..
பின்னிருந்து கவசமாய் நீ அனணத்தபடி வர.. மனமெங்கும் கள்ளூற மயங்கி சாய்கிறேன் உன் தோள்களில் நான்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

எனது ரயில் பயணங்களில்
உன்னோடு மட்டும் இருக்கும்
தனிமை சுகமே பேரானந்தம்..
உன்னோடு மட்டும்
வேடிக்கை பார்க்கும் தருணமே அமுத பானம்..
ஆள் அரவமற்ற ரயிலில் உன்னோடு மட்டும் தனித்திருக்கையில் நாம் பேசிக் கொள்ளவில்லை..
நம் மனம் தான் பேசிக்கொண்டே வருகிறது.. தொடரி தன் கூவலினால் பறை சாற்றிக் கொண்டே வருகிறது நம் காதலின் தீபத்தை.. நம் காதலின் தாபத்தை ...
கூ....கூ....கூ....
குச்சு.. குச்சு.. குச்சு...
தடக்.. தடக்.. தடக்..
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மழைத்துளிகள் சூழ்ந்திருக்க
குடைக்குள் பத்திரமாய் நாம்..
நனைந்து கொண்டிருப்பது வெறும் குடை மட்டுமல்ல..
நேசம் புகுந்த இரு நெஞ்சங்களும் தான்..
ஜில்லென்ற மழைத்துளியும்
ஜிவ்வென்ற குளிர் காற்றும்
நம் தேகம் வருடி,
புதிதாய் பூத்து குலுங்க வைக்கிறது ஒரு பூங்காவனத்தை நமக்குள்..
உன்னோடு இருப்பது கோடையிலும்
மழைக்காலம் என்றால்
மழைக்காலத்தில் உன்னோடு இருப்பதை என்னவென்று சொல்வது?
தூரலில் நனையாமல் இருக்க சரணடைந்தோம் குடைக்குள்..
இப்போது குடைக்குள்ளும் மழை பெய்கிறதே என்ன செய்வது?
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Offline PreaM



 :தொலைதூரம் ஒரு பயணம்
தொடர்வண்டியில் தொடரும்
துணையாய் நீயும் வந்தால்
வெகுதொலைவும் அருகில் அமையும்

தனிமையில் இரயிலில் பயணம்
துயரமே நீ இல்லா தருணம்
தொடரனும் நம் பயணம்
இணைந்தே இறங்கிடும் வரையும்

படியினில் நம் பயணம்
பரவசம் மனம் அடையும்...
வீசிடும் குளிர் தென்றலைவிட
உடல் சிலிர்க்கும் உன் மூச்சு காற்று

விரல் கோர்த்து கதைபேசி
பயண நேரம் அறியாமல்
ஊர் கடந்து போனாலும்
காலம் கடந்து போனாலும்

பக்கத்திலே நீ இருந்து
பாசத்தோடும் நேசத்தோடும்
பக்குவமாய் அரவணைத்து
பத்திரமா என்னை பாதுகாத்த

இந்த பயணம்
இரயில் பயணத்தில் மட்டும் போதாது
தொடர வேண்டும்  நம் வாழ்க்கை பயணத்திலும் ....

Offline Minaaz

அவனோடு நான்...

மாலை மங்கும் நேரம்
கதிரவனும் கூச்சம் கொள்ளும் தருணம்..
சில்லென்று காற்று வீச..
அருவிகள் சீறிப்பாய்ந்து கொட்ட..
தொடங்கியது ஒரு பயணம்....


ஜன்னல் ஓரமாய் நான்..
ஜென்ம ஜென்மமாய் கண்ட ஆசைகளுடன்..
என் கற்பனைக்குள் நான் மூழ்கிப் போய் இருக்க,
என் முன்னே என்னவன்..


என்னவனின் கேசத்துடன் தென்றல் காற்று செல்லமாய் சண்டை போட்டு கொண்டிருக்க, என்னவனும் பிடிவாதமாய் தென்றலுடன் சண்டை போட்டு கேசத்தை தன் விரல் கோதி மடக்கிக் கொள்ள...
மடங்கி போனேன் என்னவனின் எழிலில்...

அவன் பாதம் தொடர்ந்து நான் நடக்க என்னமோ என் மனமோ அவன்பின்னே தொடர அவன் விரல் பிடித்திடும் ஏக்கம் என்னை ஆழ,
புரிந்து கொண்டானோ என்னவோ அடுத்த கணம் பற்றியது என் கைகளை..

சுற்றியும் பயணிகள் ஆட்கொள்ள இரவல் வாங்கிய குடையுடன் என்னவனும் நானும் மழை இன்றியும் நனைந்தோம் காதல் மழையில், கன்னங்கள் சிவந்திட நானங்கள் குறுகிட...

Offline TiNu



முடிவில்.. தொடங்கிய.. ரயில் பயணம்..
=====================================

சீறி பாயும்..  மேற்கத்திய காற்று... என் முகத்தில் தவழ...
சீராய் முடிந்த என் கூந்தலும்.. அலையென காற்றில் பறக்க..
அவன் தோள்களில்.. கண்மூடி.. தலைசாய்ந்தேன்.. அமைதியாக..

அவன் தோள்களில்..  நிம்மதியாக கண்மூடிய எனக்கோ..
பல நாட்கள் பின்னோக்கி.. மெல்ல நகர்ந்தது என் நினைவுகள்..
மறக்க முடியுமா? அந்த..  கசப்பான.. தித்திப்பான நினைவுகளை.

அன்று,
யாரோ செய்த பிழைக்கு..  எனை பழி சொன்ன ஊர்முன்னே..
கலங்கிய விழியோடும்.. கனத்த நெஞ்சத்தோடும்..
உயிர் அற்ற உடலாய்.. உடலற்ற உயிராய் நின்றிருந்தேன்....

தாய்தந்தையில்லா பிள்ளைகளில் தலைவிதி இதுதானோ..
எங்களின் மீது நம்பிக்கை வைக்க இங்கே, யாருமில்லையே...
குமுறிய மனதோடும்.. தளர்ந்த நடையோடும்  கிளம்பினேன்..
 
எங்கே போவது என்று தெரியாமல்.. புரியாமலே.
கால் போன போக்கில் நடந்து... நிலையம் விட்டு கிளம்ப
நின்ற ரயிலில் ஏறினேன்.. போகுமிடம்.. அறியாமலே..

அப்பொழுது ,
சட்டென நானும் என் சுயநினைவுக்கு வர.. பதறினேன்..
ஐயோ! ரயில் எங்கே போகின்றது.. நாம் எங்கே போகிறோம்..
மனதில் 1000, பதில் இல்லா..கேள்விகள் எழ..  அச்சத்தில் உறைந்தேன்..

அச்சமயம்,
 பயணசீட்டு பரிசோதனையாளர் வேறு.. எனை நெருங்க..
கண்களில் பயம் தெறிக்க செய்வதறியாது.. திகைத்தேன்..
நானோ விழிகள் பிதுங்க நிற்க.. ticket please என்றார் அவர்...   

பயணியர்  அனைவரும் எனை பார்க்க.. கூசி குறுகி நின்றேன்..
"அவள் என்னவள்... இதோ அவளுக்கான பயணசீட்டின் பணம்.. "
என் பின்னிருந்து ஓர் கரம் எனை பற்ற.. திகைத்து திரும்பினேன்...

வெள்ளை பற்கள் தெரிய.. சுந்தரமாக சிரித்தது ஓர் முகமும்..
படபடக்கும் கண்களோடு.. வெறிய.. வெறிய விழித்தேன்...
என்றுமே.. உன்னோடு உனக்காக இருப்பேன் என்றது அவன் கருவிழிகள்.. 

அன்று,  ஊர் துறந்து.. உறவுகள் துறந்து... உலகை வெறுத்து..
வாழ்ந்தது போதுமென..  என் இறுதிபயணத்துக்கு..
எத்தனித்த தருணம்... என்னுள் நுழைந்த உயிரே அவன்.... 

அன்று, ஏதோ ஓர் ஊரில்... ஏதோ ஓர் மூலையில்..
யாருக்கும் பயனற்று... நீந்திய என் வாழ்வில்..
சற்றும் எதிர்பாராது.. என்னுள் நுழைந்த உறவே அவன்....

அன்று.. என்னுள் இருந்த பயமும் இறுக்கமும் இல்லா மனதுடன்..
இன்று.. என் அருகில் அவன்... அவன் தோள்களில்..... நான்...
அவன்.. கரங்களுக்குள்.. என் கரங்கள் துயில... தொடர்ந்தது என் பயணம்..
 


Offline VenMaThI



தொடர்வண்டி பயணம் - அதில்
தொலைந்த சில தருணம்...
தொலைவில் நின்ற உன்னுடன் - வாழ்வை
தொடர நினைத்த எம்மனம்....

அங்கிருந்து அண்ணல் நோக்க
இங்கிருந்து  இவளும் நோக்க..
இருவரின் பார்வையும் பாலமாய்ப்போக - மனதால்
மடிசாய்ந்து மயங்கத்தொடங்கினாள்.......

கண்களோ காதல் மொழி பேச..கோர்த்த
கரங்களோ காற்றிலே ஊஞ்சலாட....
காதலர் சுற்றித்திரியும் பூங்காவாய்
இப்பெட்டியை என் கற்பனையில் கொண்டேன்...

காதலனாய் என் மனதைப்பறித்தவனை
கணவனாகவும் கைபிடிக்க எண்ணினேன்...
சுற்றியுள்ள அனைவரையும் எம்
உறவுகளாய் எண்ணி - மணமேடையாய்
இந்த பெட்டியையே மனக்கண்ணில் நிறுத்தினேன்...

ஆண்டவா இந்த நொடி மட்டுமின்றி
இனிவரும் நொடிகள் அனைத்திலும்
இத்தொடர்வண்டி பயணம் போல்.. தொடரட்டும் எம் வாழ்நாள் என வேண்டினேன்..

சட்டென தூக்கம் கலைய
கனவை துறந்து கண்களை திறந்தேன்
கனவில் கண்ட அதே முகம்.. ஆனால் சற்று தொலைவில்
அண்ணலும் நோக்கினான் இவளும் நோக்கினாள்....

இருவரும் ஒன்றாய் இறங்கிய தருணம்
இறைவா உன்னிடம் கேட்க நினைக்கிறன்
பல பெட்டிகள் இருந்தும் என் பெட்டியில் ஏனவன் (ஏன் அவன்)??...
ஒரு திசையில் பயணித்த நாங்கள் எதிர் திசைகளில் செல்வதேனோ??

பலரும் இருந்த அப்புகைவண்டியில்..பளிச்சென்று
அம்முகம் மட்டும் என் கண்ணில் பட்டதேனோ??..
கரம் பிடிக்கும் கணவன் இவன்தான்
என என் கருத்தில் நிறைத்திடவோ??

உலகம் உருண்டை என்பது உண்மையானால்
ஒரு நாள் என் திசையில் நீ இருப்பாயென்ற   நம்பிக்கையில்.... ❤️❤️❤️❤️❤️




Offline SweeTie

தொடர் வண்டியில்  ஒரு காதல் ஊஞ்சலில்
சில்லென்ற  குளிர் காற்றும்  இரவும் தாலாட்ட
நுழைவாயிலில்   காதல் மயக்கத்தில்  அவனும் அவளும்
தொட்டணைக்கும் கைகளை தட்டிவிட மனமில்லாத அவள்
அவள் உஷ்ணத்தில் பரவும்  காதல் ஜுரத்தில் அவன்
இதயங்கள் கக்கும்  தீச்சுவாலைகள்  கண்களில் தெரிய
காந்தர்வ உலகில்  வலம்வரும்   அவனும் அவளும்   

காதல் என்னும் தேர்வெழுதி  காத்திருந்து சித்தி பெற்று
ஊர்வலம்போகும்  காதல் ஜோடிப்புறாக்கள் 
வண்டி நிற்பதும்   ஓடுவதுமாய்  தொடர்கிறது
இடை இடையே  அதன் கூவல்  சத்தம்
தொடர்வண்டியின்  ஊஞ்சல்   அசைவில்   அவள்
 காதுகளில்  அசைந்தாடும்  டோலாக்கு ஜொலிக்க
தளராத அவன் பிடியில் அவள் இடையும்  தவிக்க
சீனிக்குள்ள  எறும்பு சிக்கிக்கொண்ட கணக்கு

உன் மூச்சும்  என் மூச்சும்   ஒன்றாக வேண்டும்
கண்ணோடு  கண் பார்த்து  கவி பாடவேண்டும்
மனதோடு மனம் பேசி தோள்சேர வேண்டும்
பூவோடு மணம் போல  கடலோடு  பிரியாத  அலைபோல
காதலின்   சுகம் காணவேண்டும்   என் அன்பே
உன்னோடு  நானாக  என்றும்

காலமெல்லாம் நீ  என் உயிராக வேண்டும் 
நம் கனவுகள்   அனைத்தும்  நிஜமாகவேண்டும்
பக்கத்தில்  நீ இருந்தால்    பால்நிலாவும் தோற்றுவிடும்
வெக்கத்தில்  சிவக்கும்  உன் முகம்  காணவேண்டும்
காதலின் அணைப்பில்  காற்றும்  நுழையாமல் 
கண்ணே  நாம் துயில்  கொள்ளவேண்டும் *

வெயிலில்  வெந்துபோகவேண்டாம்  எம் காதல்
மழையில்   கரைந்து போக வேண்டாம்  எம் கனவுகள்
இன்பத்திலும் துன்பத்திலும் எம்மோடிரு  காதலே
சாரலில்  நாம் நனைவதும்    வாடையில்  நாம் காய்வதும் 
குடைக்குள்   இரு மழைத்துளிகல்  தளுவிக்கொள்வதும்
கொழுகொம்பில்  கொடியது  சுற்றிக்கொள்வதும்   
காதலை கொண்டாடும்  கணங்கள் அல்லவா?
 

Offline Kavii

வழிகளின் சந்திப்பில் விழிகள் பேசும் காதல், ரயிலின் தடங்களில் உயிர் ஓவியம் உண்டாக்கும் நெஞ்சின் வரிகள், தண்ணீரின் மெல்லிய மழையில் முளைத்த காதல் மலர், உன் நினைவின் நிழலிலும் என் மனத்தின் எழுத்துக்களில் சேரும் பக்கங்கள்.

அந்த தருணங்கள் சொன்ன சொற்பொழிவு, உணர்வுகளின் மௌன மொழியில் நம்மை வார்த்த கவிதை, வழியினில் எங்கள் நடைகள் சேர்ந்து சில ஓவியங்கள் வரைந்தன, தடங்களின் ஓசையில் நம் உறவின் தாளங்கள் எழுதப்பட்டன.

ஒவ்வொரு முறை உன் கண்களை நோக்கும்போது நானும் என்னுள் ஓர் புதிய உலகை கண்டேன், ரயிலின் பயணம் போலவே எங்கள் பயணமும் தொடர்ந்தது, தடங்களின் ஒலிகள் சத்தமாக நம் காதலின் இதழ்கள்.

மௌனத்தின் இனிமையிலே நம் இதயம் பேசியது, வார்த்தைகள் தேவை இல்லாமல் மனது இணைந்தது, கண்கள் மட்டும் பேசும் பாசத்தில் காதல் உறுதியானது, ஒவ்வொரு முறை உன் சிரிப்பு என் இதயத்தில் ஓவியமாய் பொறித்தது.

நம் காதலின் தடங்களில் நம்பிக்கை உருவாகியது, தோழமை எனும் பெயரில் நம் உறவு மலர்ந்தது, பாதையின் ஒவ்வொரு நொடியும் பிரமாதமாக அமைந்தது, உன் கரங்கள் என் கைபிடித்த போது மனம் முழுதும் நிம்மதியாகியது.

மழையின் பொழிவில் நம் நினைவுகள் உதிர்ந்தது, பூக்களின் மணத்தில் நம் காதல் நெஞ்சில் மலர்ந்தது, மழைத்தூவியின் முத்தம் போல உன் சிரிப்பு என் உயிர், உன் கண்களின் தீபம் எனை வழிநடத்தும் வீசல்.
காதல் எனும் பெயரில் நம் வரிகளின் பயணம், உறவின் கனவில் நம் மனம் ஒன்றாய் சேர்ந்தது, வாழ்வின் எல்லையில் நம் இதயம் துடித்தது, உன் நினைவுகள் என் வாழ்வின் மூச்சாகியது.

மௌனத்தின் வார்த்தைகள் நம் இதயத்தின் மொழி, உன் சிரிப்பில் என் வாழ்வின் அத்தியாயங்கள், ஒவ்வொரு சந்திப்பிலும் உன்னால் நிறைந்தது என் நெஞ்சம், உன் புன்னகை எனை வழிநடத்தும் நட்சத்திரம்.

மழையெனும் போதில் நம் காதலின் சுவடுகள், நம் உயிரின் பாதை வழியில் எழுதப்பட்ட வரிகள், விழிகளின் சந்திப்பில் தோன்றும் அன்பின் நிறம், நம் காதல் எனும் ஓவியத்தின் நிறமாய் மாறியது.