அச்சிரண்டை கொண்டு,
அவ்விரண்டில் நின்று!
சக்கரத்தை சுற்றி,
சமத்துவத்தை பற்றி,
ஒடிடுமே எங்கும்,
ஓய்வின்றி நாளும்..
நீர் துளியை சுமந்து,
காற்றினிலே தவழும்,
மேகமதை போல!!
நம்மையுமே சுமந்து,
சாலைகளை கடந்து,
சேர்த்திடுமே ஊரில்..
அருகினிலே இருப்போர் ,
ஆரணவே நாமும்,
ஆராய்ச்சி இன்றிஆனந்தமாக!!
பல நேரம் பயணம்,
செய்தோமே சாதி,
மதங்களையே கடந்து
இன்பம் துன்பம்,
எனவெதையோ நாமும்,
சுமந்து வந்தாலும் ,
சங்கடங்கள் இன்றி,
நம்மை தினம் சுமக்கும்,
பேருந்து நண்பன்♥️♥️
வாரா வாரம் ஆராவாரமாய் என்னை அலுவலகம் மற்றும் வீட்டுக்கு அழைத்து செல்லும் என் பேருந்து நண்பனுக்கு இக்கவிதை
சமர்ப்பணம்..
அன்புடன் திருவாளர் பீன்