Author Topic: வாழ்ந்துகெட்டவனின் வீடு  (Read 1142 times)

Offline Guest 2k

வாழ்ந்துகெட்டவனின் வீடு

காலம் தின்றுசெரித்த பூவரச மரத்தின்
நிழல் விழும் அவ்வீடு
வாழ்ந்துகெட்டவனின் வீடு

நொடித்திருந்த நிலைக்கதவுகளுக்கு
பேரானந்தத்தையும் பெருஞ்சோகத்தையும் தாங்கிய
ஓராயிரம் கதைகள் தெரியும்

வண்ணப் பொட்டுகள்
நிறைந்திருக்கும்
ரசம் ஏறிய கண்ணாடியில்
காலம் சொல்லும் வீட்டுப்
பெண்களின் கண்ணீர் கதைகள்

வலசைப் போன
பறவையின் சாயல்களைக் கொண்ட
சாவிகளற்ற பூட்டுகள்
ஆளற்ற வீட்டில்
குழந்தைமையின் சபரிசங்களை தேடும்
கை உடைந்த பொம்மைகள்
துருப்பிடித்த பெட்டியில் மிஞ்சியிருக்கும்
அம்மம்மாவின் புடவை வாசனை
யாரோ எப்பொழுதோ விட்டு சென்ற
சோழிகளிரண்டு தனித்திருக்கும்
சிதலமடைந்த திண்ணைகள்

கரையான் அரித்த புகைப்படங்களின்
தெளிவற்ற முகங்களின் புறத்தே
நித்தியமாய் தெரிவது
வாழ்ந்துகெட்டவனின்
கம்பீரமான வீடு மட்டுமே

எலிவளைகளும் கரையான் புற்றுகளும்
தாங்கி நிற்கும்
அவ்வாழ்ந்துகெட்டவனின் வீட்டிற்கு
மட்டும்
ஆயிரம் வாசல்கள்

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்

Offline Guest

Re: வாழ்ந்துகெட்டவனின் வீடு
« Reply #1 on: November 01, 2018, 04:49:30 PM »
Wow.... nice one
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ

Offline Guest 2k

Re: வாழ்ந்துகெட்டவனின் வீடு
« Reply #2 on: November 01, 2018, 05:32:13 PM »
நன்றி நண்பா :)

வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை குறித்து அச்சமாயிருங்கள்