Author Topic: நீலிக்கண்ணீரா? நிஜக்கண்ணீரா?  (Read 866 times)

Offline Yousuf


ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது (Promoting Reconciliation and Accountability in Sri Lanka).

இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது.

உலகத் தமிழர்கள் இந்த அவைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய ஆதரவு குரல் நேரடியாக ஐ.நா. மனித உரிமை குழுவில் வெளிப்பட வாய்ப்பு இல்லை.  ஆனால், மறுபுறம் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடு என்கிற அடிப்படையில் தனது தூதுக்குழுவினரை நேரடியாக அனுப்பி ஐ.நா.அவையில் தீவிரப் பிரச்சாரத்தை செய்துவருகிறது.

இதற்கு பதிலடி தரும் விதமாக பசுமைத் தாயகம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டங்களில்  அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  அந்த அடிப்படையில்  ஐ.நா. மனித உரிமைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பாக இலங்கைக்கு எதிராக அமேரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரித்து  இலங்கைத் தமிழ் அமைப்பினர் பங்கேற்பதே பொறுத்தமானதாக என்று முடிவு செய்தோம்.

அதனடிப்படையில் உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை அமைப்பின் சார்பில் ஸ்டாண் ஃபோர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் யெசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் (PEARL), தமயந்தி ராஜேந்திரன், இலங்கை அரசு மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குத் தொடுத்துள்ள அட்டர்னி அலி பைதூன் (SPEAK) - ஆகிய ஐந்து பிரதிநிதிகள் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் பசுமைத் தாயகம் சார்பான பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய துணைக்கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிரான வாதங்களை பதிவு செய்தனர். அந்த வகையில் ஐ.நா. அவையில் இலங்கை அரசுக்கு எதிரான நேரடிப் பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் அமைப்பு  மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

   
நன்றி: பசுமை பக்கங்கள் அருள்.
********************************************************************
கருணாநிதி, ஜெயலலிதா மாதிரி நீலி கண்ணீர் வடிக்காமல் அறிக்கையுத்தம், கடித போர் நடத்தாமல் உருப்படியான ஒரு காரியத்தை நகர்த்தியுள்ள பசுமைத்தாயகம் அமைப்பிற்கு நமது நன்றி.