தேவையான பொருள்கள்
ரவை - 250 கிராம்
சர்க்கரை - 1 கப்
அரை மூடி தேங்காய் - துருவியது,
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.
இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய் நெய் கலந்து, வைத்து கொள்ளவும்
பின்பு மாவை புட்டு வேகவைக்கும் குழாயில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி