Author Topic: கோடீஸ்வரராக ஆசையா????  (Read 1029 times)

Offline Global Angel

கோடீஸ்வரராக ஆசையா????
« on: February 26, 2012, 04:50:03 AM »
சுவற்றில் மாட்டியிருந்த நாட்காட்டியில் மாங்கல்ய படம் அச்சிடப்பட்ட நாட்களை அதிகமாக காணமுடிந்தது, திருமணங்கள் செய்வதற்கான சிறந்த நாட்களாக கணித்து அந்நாட்களை மாங்கல்ய குறியுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது போலும், அதைவிட அன்றைய அதிசயமாக வீட்டிற்கு வந்திருந்த திருமண அழைப்பிதழ் என்னை சிந்திக்க செய்தது அதற்க்கு காரணம் பெரிய எவர் சில்வர் தாம்பாள தட்டில் நடுவே மிகவும் அழகான வார்த்தைகளால் பொறிக்கப்பட்டிருந்த மணமக்களின் பெயருடன் அத்தட்டில் வைத்து விநியோகிக்கப்பட்டிருந்த அத்தாம்பாள தட்டை விட மிகவும் பெரிதான திருமண அழைப்பிதழ். திருமணத்திற்கு தேவையான ஒரு மாங்கல்யமோ புடவையோ கூட வாங்கி திருமணம் நடத்த இயலாத மக்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்ட நமது இந்திய சமுதாயத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மூன்று வேளைக்கு போதுமான உணவிற்கு வசதியில்லாமல் வாழ்ந்து வந்த ஒரு தனி நபர் ஒரு சில வருடங்களுக்குள்ளேயே பல கோடிகளுக்கு சொந்தக்காரர், அவர் தகவல் தொழில்நுட்பப பொறியாளர் இல்லை, மழைக்கோ வாக்களிப்பதற்க்கோ கூட பள்ளிக்கூடம் பக்கம் போனதில்லை, ஒருசமயம் ஓட்டளிப்பதற்க்காக வாக்காளர்களை கூட்டிச் சென்றிருக்கலாம் அல்லது ஏதாவதொரு அரசியல் கட்ச்சிக்காக குண்டர் கூட்டத்தில் சேர்ந்துகொண்டு அங்கே காவல் செய்யும் பணிக்காக சென்றிருக்கலாம் தவிர அட்ச்சரம் கற்றரிவதற்க்காகவோ, எண்களை கூட்டிக் கழிக்க படித்தறிவதற்க்காகவோ பள்ளிக்கூடத்திற்கு சென்றிக்க வாய்ப்பே இல்லை. அவர் என்ன செய்வார் அவரை பெற்றவர்கள் அவரை படிக்கவைக்கவில்லையோ, அல்லது படிக்க வைத்தும் படிக்க அவருக்கு விருப்பமில்லையோ. சமுதாயத்தில் சம்பாதிக்க அவரால் கவர்ந்திழுக்கப்பட்ட ஏதோ ஒரு வழி அவரை இன்று பல கோடிகளுக்கு சொந்தக்காரராக மாற்றி இருக்கிறது. அவருக்கு தெரிந்ததெல்லாம் பணத்தை எப்படியாவது சேர்த்துவிடுவது ஒன்றுதான், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்.

எவ்வழியிலாவது பணம் சேர்க்கின்ற அதே சமயம் அவர் வேறு ஒன்றையும் அவரை அறியாமலேயே சேர்த்து வைத்திருப்பதை பாவம் அவர் அறியவில்லை. அதைப்பற்றி அவரிடம் எடுத்து சொல்வதற்கு ஆளில்லாமல் போனதால் அவருக்கு தெரியாமல் போனதா? அல்லது யாராவது சொல்லியிருந்தாலும் அவருக்கு அது நகைச்சுவையாக இருந்திருக்குமோ என்னவோ, சம்பாதித்த பணத்தில் தனது பிள்ளைகளை அமெரிக்காவிற்கோ ஆஸ்த்திரேலியாவிற்கோ அனுப்பி, படிப்பதற்கு போதிய ஆர்வமோ போதிய அறிவோ இல்லாவிட்டால் கூட தான் படிக்காத பெரிய படிப்பை படிக்க வைத்து தன்னை விட பண வசதியிலும் படிப்பிலும் அதிகமாக வாழுகின்ற பணக்கார வீட்டில் சம்பந்தம் ஏற்ப்படுத்தி அத்திருமணத்திற்க்கு ஊரிலிருக்கின்ற பெரிய பிரமுகர்களை அழைத்து அவர்களை அழைப்பதற்கே பணத்தை வாரியிறைத்து மிகவும் விமரிசையாக தடபுடலாக ஊரே ஆச்சரியப்படும்படி நடத்தி முடித்து, தான் பெற்ற பிள்ளைகளுக்கு பல கோடிக்கணக்கில் சொத்துக்கள் வழங்கி மீதமிருக்கின்ற சில இலட்ச்சங்களை தன் பெருமை புகழ் பாடுகின்றவர்களுக்கு இலவச படிப்பு இலவச அறுவை சிகிச்சை என்று உபகாரங்கள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வதிற்கு பதிலாக பெருமையை தேடிக்கொண்டு வாழுகின்ற மனிதனின் ஒட்டு மொத்த பாவச்சின்னமாக அந்த திருமண பத்திரிகை பிரதிபலித்தது.

நமது பிள்ளைகளுக்கு சிறப்பானவற்றையே அதிகபட்சமாக கொடுக்க ஆசைபடுகின்ற நாம், அவ்வாறு பிரயாசப்பட்டு சம்பாதிக்கின்ற போது அநியாயமான வழிகளில் அதிசீக்கிரமாக அதிக பணத்தை அடைய எடுக்கின்ற வழிகளில் அவர்களுக்கு பாவ சாபங்களை நம்மையும் அறியாமல் அதிகமாக சேமித்து கொடுக்கிறோம் என்பதை ஏன் உணருவதில்லை. அவ்வாறு சேமிக்கப்படுகின்ற பணம் நமக்கும் நமது தலைமுறையினருக்கும் பயன்படாமலேயே போய்விடும் என்பதை ஏன் நினைத்துப் பார்ப்பதில்லை. 'பாவ புண்ணியம் என்பதெல்லாம் உண்மையில்லை' என்று நம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்வதினாலே. கல்லூரி பள்ளிகளில் கட்டணம் என்கின்ற பெயரில் கொள்ளை, நகை பணத்திற்காக கொலை, லஞ்சம், வருவாய்க்கு மேல் சொத்து சேர்ப்பது, நிலமோசடி, வழிப்பறி, கள்ள ரூபாய் நோட்டு, நில தகராறுகள், சொத்து பிரிப்பதில் வன்மம் இன்னும் பல சமுதாய விரோத செயல்கள் மலிந்து வருவதை நமக்கு எடுத்து காட்டுகிறது. உடலிலிருந்து உயிர் பிரிகின்ற தருவாயில் மரண படுக்கையில் தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தி கிடப்பதில் யாருக்கு பிரயோசனம். வாழ்கின்ற நாளில் அவற்றை சிந்தித்து செயல்படுதலே சிறந்தது.