Author Topic: 'சரக்கு' விக்குற நேரத்தை கூட்டுறாங்களாம் - குடிமகன்களுக்கு குஷியோ குஷி!  (Read 1089 times)

Offline RemO

டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் நேரத்தை கூடுதலாக்க வாய்மொழியாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காலை 9 மணி முதல் இரவு 11 மணிவரை மதுபானக் கடைகளை திறக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் பணியாளர்களுக்கு ஷிப்டு முறை தேவை என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன். பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 முதல் இரவு 10 மணிவரை நடத்துவதற்கு நடைமுறையில் உள்ளது.

ஆனால் காலை 9 மணி முதல் இரவு 11 மணிவரை நடத்த அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளனர்.

எங்கு எல்லாம் கூடுதல் நேரம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் 2 ஷிப்டு முறையில் பணியாளர்களை பணிநியமனம் செய்து அதிகாரப்பூர்வமான விற்பனையை நடத்துவதன் மூலம் வருமானம் பெருகும்.

பணியாளர்களின் அச்ச உணர்வையும் போக்கலாம்.

பார்களில் விற்பனையாகும் அதிகாரப்பூர்வமற்ற மதுபானங்களை தடை செய்யவேண்டும்.

பணியாளர்களுக்கு பணிபாதுகாப்பு, பணிநிரந்தரம், தக்க ஊதியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய நிபுணர் குழுவை அமைக்கவேண்டும்.

டாஸ்மாக் நிர்வாக இயக்குனரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நிலுவையில் உள்ள மருத்துவ நலநிதியை வழங்க வலியுறுத்தினோம். வேலூர் மாவட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 17 பேருக்கு பணி வழங்க கூறினோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Offline Yousuf

இந்த அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மக்கள் நலனில் கவலை அற்றவர்கள் என்பது விளங்குகிறது.

மக்கள் நலனில் நாளைய தேசத்தின் நலனிலோ கவலை உள்ள எந்த ஆட்சியாளரும் மதுவுக்கு அங்கிகாரம் கொடுக்க மாட்டார்.

இவர்கள் சுயநலம் பிடித்த ஆட்சியாளர்கள் என்பதை இந்த ஒரு சம்பவத்தில் இருந்து நாம் தெளிவாக விளங்க முடிகிறது.